🔥 Salem 8th Std Tamil Half Yearly Exam 2025 – Answer Key PDF Out Now! 📘✅

 

 சேலம் – அரையாண்டுத்  தேர்வு  -டிசம்பர்-2025

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.30 மணி                                                                              மதிப்பெண் : 100

பகுதி – 1

I) மதிப்பெண்கள் - 10

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ) அணிகலன்களாக

1

2.

ஆ. கல்லாதவர்கள்

1

3.

இ. அச்சுக்கலை

1

4.

ஆ.மார்பு

1

5.

அ. முகில்

1

6.

ஆ. நெல்

1

7.

அ) அ + களத்து

1

8.

ஆ. எச்சம்

1

9.

இ. உணவின்

1

10.

இ.முழவதிர

1

II) கோடிட்ட இடம் நிரப்புக - 5

11.

திருப்பூர்

1

12 .

அறிவியல்

1

13 .

தலை

1

14 .

கண்ணெழுத்துகள்

1

15

நான்கு

 

III) பொருத்துக - 5

16

பெரிய புராணம்

2

17.

தன்வினை

2

18.

சேலம்

2

19

வினையெச்சம்

2

20

பத்துப்பாட்டு

2

 

பகுதி - 2

 

IV) அடிமாறாமல் எழுதுக                     4 + 2 = 6

21.அ

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வெளவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் – நல்லந்துவனார்

4

21ஆ

*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே! *   - பாரதியார்

 

22

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

 வெல்லும்சொல் இன்மை அறிந்து

 

பகுதி - 3

V) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு குறுகிய விடையளி        5 X 2= 10

23

Ø    தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது

2

24.

'தமிழ்நாட்டின் ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல்  மலர் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால், தமிழ்நாட்டின் ஹாலந்து என்று  திண்டுக்கல் நகரம் போற்றப்படுகிறது.

2

25

v நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.

v பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்

1

1

26

தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

2

27

சித்தர்கள் வாழ்ந்ததாக பாடல் கூறுகிறது.

1

1

28

§   நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

§   அளவான உணவு

§   சத்தான உணவு

2

29

வெண்ணிலவு, சூரியன், மழை

2

VI ) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு குறுகிய விடையளி        5 X 2 = 10

30

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இரு வகைப்படும்.

2

31

எழுவாய், ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை ஆகும்.

எ.கா : செல்வி கடலைக் கண்டாள்

2

32

க.இய,இயர், அல்

2

33

ü  வல்லின மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ü  மெல்லின மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ü  இடையின மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

2

34

, , ந ல, , ள ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

2

35

பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.

2

VII) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி        5 X 3 = 15

36

Ø  சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

Ø   விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

Ø  எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Ø  கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்

3

37

·     பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.

·     பொன்வண்ணநீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.

·     மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும்.

·     இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.

3

38

மட்டக்கூடை தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,தெருக்கூட்டும் துடைப்பம், பூக்கூடை, கட்டில் புல்லாங்குழல்,கூரைத்தட்டி போன்றவை மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்.

3

39

தமிழ்

கடல்

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்

முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம்

மூன்று வகையான சங்குகளைத் தருதல்

ஐம்பெரும் காப்பியங்கள்

மிகுதியான வணிகக் கப்பல்கள்

சங்கபலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தது

நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்

3

40

Ø வாங்கல் ஊரில் வைக்கப்பட்ட தென்னம் பிள்ளைகள் வீணாயின.

Ø தொண்டைமான் நாட்டில்  வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

3

41

ü  ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது, புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

ü  இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர்.

3

42

ü  இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.

ü  பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

ü  பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

ü  அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

ü  அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.

ü  செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

ü   நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.

ü   நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.

3

VIII) பகுதி – 4 / கடிதம்                                  1 X 5 = 5

43அ

அனுப்புநர்

பெறுநர்

ஐயா, பொருள்

கடித விளக்கம்

இப்படிக்கு,                                                  

இடம், நாள்

உறை மேல் முகவரி

5

43ஆ

இடம், நாள்,

விளித்தல்

கடித விளக்கம்

இப்படிக்கு

உறை மேல் முகவரி

5

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                           5 X 2 = 10

44

அ) மணம்          ஆ) பரவை

2

45

அ) நீண்ட காலமாக இருப்பது

ஆ) விரைந்து வெளியேறுதல்

2

46

அ) கல்வி கேள்வி           ஆ)  போற்றிபுகழப்பட

2

47

தக்கார் தகவில ரென்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்

2

48

அ) உயிரொலி              ஆ) ஆலை

2

49

அ) தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது

ஆ) உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.

2

பகுதி - 5

IX ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                    3 X 8 = 24

50அ

   உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல் வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது.

உள்நாட்டு வணிகம் :

    சேர நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர், உப்பும் நெல்லும் ஒரே  மதிப்புடையனவாக இருந்தன என்பதை அகநானூற்றின் 300வது பாடல் மூலம் அறியலாம்.

வெளிநாட்டு வணிகம்:

    முசிறி சேர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்து நான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை, தத்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன்மலிமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடுகள் அமைத்த ஆடைகள் பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.

8

50

Ø  தனித்துவமான பார்வை

Ø  சூழலுக்கு இசைந்த மருத்துவம்

Ø  சுற்றுச்சூழலை பாதிக்காத மருந்துகள், மூலக்கூறுகள், பயன்பாடுகள்

Ø  நோய்க்கான சிகிச்சை மட்டும் இல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலை கூறுவது இதன் முக்கியமான சிறப்பு.

Ø  நோய் நாடி நோய் முதல் நாடி ‘ திருக்குறளின் படி நோயை மட்டுமன்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்க முயல்கிறது.

8

51

v கிராமத்தில் பணி புரியும் ஆசிரியரின் வேட்டி களவாடப்பட்டிருந்தது.

v அதை அக்கிராமத்தைச் சேர்ந்த சிகாமணிதான் எடுத்திருப்பார் என கிராம மக்கள் கூறுகிறார்கள். ஆசிரியருக்கும் அதே சந்தேகம். ஆனால் கேட்க மனமில்லை.சிகாமணியின் மகன் சகாதேவன் அந்த ஆசிரியரிடம் மாணவனாகப் பயின்று வருகின்றான்.

v வகுப்பில், திருக்குறளில், 'பண்புடைமை' என்னும் அதிகாரத்தில் உள்ள, அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் எனும் குறளினை நடத்துகிறார். சிறந்த குடியில் பிறத்தல் என்னும் கருத்தினை சொல்ல ஆசிரியருக்குத் தயக்கம்.

v சிறந்த குடியை உருவாக்குதல் என மாற்றிக் கூறினார்.  அதற்கு காரணம், சகாதேவனின் குடும்ப பின்னணியே ஆகும்.திருடன் மகன் திருடன் என்று பெயர் எடுத்தல் கூடாது. அதை வழிவழியாகத் தொடராமல், தான் நல்வழியில் வாழ்தல் தான் சிறந்த குடிபிறப்பு என்று கூறினார்.

v அவன் தகப்பன் கெட்டவன். மகன் நல்லவன் என்று கூறுதல் வேண்டும். அவ்வாறு பெயர் எடுக்கவேண்டும் என்று ஆசிரியர் பாடம் நடத்தினார்.

v மனம் திருந்திய சகாதேவன், அவ்வூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தியிடம், அவ்வேட்டியினைக் கொடுத்து அனுப்பினான்.

v கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியரிடம் அதைக் கொடுத்துவிட்டு, அவன் அப்பா வீட்டில் மறைத்து வைத்த வேட்டியைத் தங்களிடம் தருமாறு சகாதேவன் கூறினான் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினான்

v ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார் தான் வகுப்பில் நடத்திய பாடம். மாணவனின் மனதை மாற்றியுள்ளதே என நினைத்து பூரித்துப்போனார்

v மேலும், அவனுக்கு அவன் அப்பாவால் தண்டனை கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, ஊர் மக்களிடம், இதோடு, இப்பிரச்சனையை விட்டுவிடுமாறு வேண்டினார்.

ஆம்! குழந்தைகளே, ஆசிரியர் நடத்தும் பாடத்தை வாழ்வில் கடைப்பிடித்து, நல்லவர்களாக வாழ்வோம்.

8

52ஆ

முன்னுரை:

    மக்களின் மனதிற்கு எழுச்சியைத் தருபவை இசைக்கருவிகள், கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.

காற்றுக் கருவிகள்:

    காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொம்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.

குழல் :

    குழல் என்றால் புல்லாங்குழல் ஆகும். காடுகளில் மூங்கில் மரங்களை வண்டுகள் துளை இட்டதால் காற்று வழியாக இசை பிறந்தன. இதனைக் கேட்டும் பார்த்தும் முன்னோர்கள் புல்லாங்குழலை வடிவமைத்தனர்.

கொம்பு:

   கொம்பு இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர், அதுவே, பின்னாளில் 'கொம்பு' என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமாயிற்று. பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டன. வேட்டையாடும்போது வேடர்கள் இதனை ஊதுவார்கள். திருவிழாக் காலங்களில் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி ஆகிய கொம்புகள் இக்காலத் திருவிழாக்களில் இசைக்கப்படுகின்றது.

சங்கு:

    சங்கு ஓர் இயற்கைக் கருவி. கடலிலிருந்து எடுக்கப்படும் வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை, "வலம்புரிச் சங்கு என்று கூறுவர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்கள் இதனைப் 'பளரிலம்' என்கிறது. திருவிழாக்களிலும், சடங்குகளிலும் சங்கிளை முழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

முடிவுரை:

   அழித்து வரும் இவ்வகைக் காற்று இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக்கற்று, அதனைப்பயன்படுத்த வேண்டும்.

8

52அ

முன்னுரை:     

பாவேந்தர் என்றும் புரட்சிக்கவிஞர் என்றும் போற்றப்படுபவர் பாரதிதாசன் ஆவார். இவர் தமது படைப்புகள் மூலம் புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பியவர். இவரே நான் விரும்பும் கவிஞர் ஆவார்.

பெயர்க் காரணம்

          பாரதிதாசன் புதுச்சேரியில் பிறந்தவர். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம் என்பதாகும். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் தமது பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசனின் படைப்புகள்

         பாரதிதாசன் தனிக்கவிதைகள், குறுங்காப்பியங்கள், நாடகம் முதலான பலவகை இலக்கியங்களைப் படைத்துள்ளார். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு ஆகியவை இவரது நூல்களுள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவர் ‘ குயில் ‘ என்னும் இலக்கிய இதழை நடத்தி வந்தார். பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூல் சாகித்திய அகாதமி பரிசினைப் பெற்றது.

தமிழ் உணர்வு

         தமிழின் இனிமை, தமிழின் சிறப்பு ஆகியவை பற்றிப் பல சிறப்பான கவிதைகளைப் பாரதிதாசன் படைத்துள்ளார்.

“ தமிழுக்கு அமுதென்று பேர் “ என்னும் அடியில் தமிழின் இனிமையைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். “ தமிழை என் உயிர் என்பேன் கண்டீர் “  என்று உணர்வு பொங்கக் குறிப்பிடுகிறார். “ தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை “ என்று கூறி, தமிழ்ச்சான்றோர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள் என விளக்குகிறார்.

சமுதாய உணர்வு

         பாரதிதாசன் மக்களில் சிலரை இழிவுப்படுத்தும் சாதி வேற்றுமையைக் கடுமையாக கண்டிக்கிறார். “ சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே “ என கடிந்து உரைக்கிறார். பெண்ணுரிமை பற்றிப் பாடும் போது “ பெண்ணடிமை தீராதவரை மண்ணடிமை தீராது “ என்னும் கருத்தை வலியுறுத்துகிறார். “ கல்வியில்லாப் பெண் களர்நிலம் “ என்று கூறி, பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

முடிவுரை

         சமுதாயத்திற்குத் தேவையான சிறந்த கருத்துகளை நயம் மிக்க கவிதைகளாகப் படைத்தவர் பாரதிதாசன். எனவே பாவேந்தர் பாரதிதாசன் நான் விரும்பும் கவிஞர் ஆவார்.

8

52ஆ

முன்னுரை

நூலகத்தின் தேவை

வகைகள்

நூலகத்திலுள்ளவை

படிக்கும் முறை

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

5

விடைக்குறிப்பு தயாரிப்பு :

இளந்தமிழ் வழிகாட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

⬇️ Download Answer Key PDF

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post