WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம்
வகுப்பு
தமிழ்
தினசரி
சிறப்பு வினாத்தாள்-1-2025
நேரம்
: 40 நிமிடம் மதிப்பெண்:20
பகுதி-அ
அ) உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(10x1=10)
1. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப்_______
என்று குறிப்பிடுவார்கள்.
அ) கருத்துக்கலை ஆ) பயன்கலை இ) இலக்கியக்கலை ஈ) தொல்கலை
2. திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது_____
அ) மூன்று ஆ) ஆறு இ) இரண்டு ஈ) ஐந்து
3. மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய்
கூறமாட்டான்” என், தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது______
அ) கால வழுவமைதி ஆ) பால்
வழுவமைதி இ) இட வழுவமைதி
ஈ) திணை வழுவமைதி
4. “கவியரங்குகளே தமக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!”
என்பார்______
அ) அறிஞர் அண்ணா ஆ) பட்டுக்கோட்டை அழகிரி இ) பெரியார்
ஈ) கலைஞர்
5. சந்தநயம் மிக்கவை என்று அழைக்கப்படுவது______
அ) கம்பராமாயணம் ஆ)
திருவிளையாடற் புராணம்
இ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
ஈ) காசிக்காண்டம்
6. வெண்பா எத்தனை வகைப்படும்______
அ) இரண்டு ஆ) நான்கு இ) ஆறு ஈ) ஐந்து
7. முல்லைத் திணையின் சிறுபொழுது_______
அ) நண்பகல் ஆ) யாமம் இ) மாலை ஈ) எற்பாடு
8. “நெடுவேள் குன்றம்” என்று அழைக்கப்படுவது______
அ) அழகர் மலை ஆ) சிறுமலை இ) கொல்லிமலை ஈ) சுருளி மலை
9. பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார்_____
அ) கபிலர் ஆ) நக்கீரர் இ) பரணர் ஈ) பெருஞ்சித்திரனார்
10. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்______
அ) ஆறு ஆ) ஒன்பது இ) ஏழு ஈ) ஐந்து
பகுதி-ஆ
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(3+3+2+2=10)
11. “விருந்தினனாக” எனத் தொடங்கும் பாடலை எழுதுக.
12. “அள்ளல்” எனத் தொடங்கும் பாடலை எழுதுக.
13. “வினை”என முடியும் குறளை எழுதுக.
14. “பல்லார்” எனத் தொடங்கும் குறளை எழுதுக.
