ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – வினா உருவாக்குதல்
6.1. விடைக்கான வினா உருவாக்குக
அ) ஆகஸ்டு – 12 உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
விடை : உலக யானைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை : உலக யானைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஆ) “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் பாரதியார்.
விடை : “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் யார்?
விடை : “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் யார்?
இ) குடைவரைக் கோயில்கள் தொடங்கி, தனித்தனிக் கற்சிற்பங்கள் வரை காணப்படுவது மாமல்லபுரத்தின் சிறப்பு.
விடை : மாமல்லபுரத்தின் சிறப்பு யாது?
விடை : மாமல்லபுரத்தின் சிறப்பு யாது?
ஈ) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்.
விடை : தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?
விடை : தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?
6.2. வினாச்சொல்லைக் கொண்டு வினா அமைத்து எழுதுக
வினாச்சொல் | வினா |
---|---|
எது? | உனக்கு பிடித்த பழம் எது? |
யார்? | அங்கே நிற்பவர் யார்? |
எப்போது? | நீ எப்போது எழுந்தாய்? |
எங்கே? | நீ எங்கே போனாய்? |
ஏன்? | அவன் ஏன் அழுகிறான்? |
எப்படி? | நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |