எட்டாம் வகுப்பு - தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025- 2026
கட்டுரை
மாதிரிக்கட்டுரை
_______________________________________________________________________
நான் விரும்பும் கவிஞர்.
முன்னுரை:
பாவேந்தர் என்றும் புரட்சிக்கவிஞர் என்றும் போற்றப்படுபவர்
பாரதிதாசன் ஆவார். இவர் தமது படைப்புகள் மூலம் புரட்சிகரமான
கருத்துகளைப் பரப்பியவர். இவரே நான் விரும்பும் கவிஞர் ஆவார்.
பெயர்க் காரணம்
பாரதிதாசன் புதுச்சேரியில் பிறந்தவர். அவருக்கு பெற்றோர் இட்ட
பெயர் சுப்புரத்தினம் என்பதாகும். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட
பற்றின்காரணமாக இவர் தமது பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்
கொண்டார்.
பாரதிதாசனின்
படைப்புகள்
பாரதிதாசன் தனிக்கவிதைகள், குறுங்காப்பியங்கள், நாடகம் முதலான
பலவகை இலக்கியங்களைப் படைத்துள்ளார். பாண்டியன் பரிசு, அழகின்
சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு ஆகியவை இவரது நூல்களுள்
குறிப்பிடத்தக்கவை ஆகும். இவர் ‘ குயில் ‘ என்னும் இலக்கிய இதழை நடத்தி
வந்தார். பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூல்
சாகித்திய அகாதமி பரிசினைப் பெற்றது.
தமிழ்
உணர்வு
தமிழின் இனிமை, தமிழின் சிறப்பு ஆகியவை பற்றிப் பல சிறப்பான
கவிதைகளைப் பாரதிதாசன் படைத்துள்ளார்.
“ தமிழுக்கு அமுதென்று பேர் “ என்னும் அடியில் தமிழின் இனிமையைச்
சிறப்பாக எடுத்துரைக்கிறார். “ தமிழை என் உயிர் என்பேன் கண்டீர் “
என்று உணர்வு பொங்கக் குறிப்பிடுகிறார். “ தமிழுக்குத் தொண்டு
செய்வோன் சாவதில்லை “ என்று கூறி, தமிழ்ச்சான்றோர்கள் அழியாப் புகழ்
பெறுவார்கள்
என விளக்குகிறார்.
சமுதாய
உணர்வு
பாரதிதாசன் மக்களில் சிலரை இழிவுப்படுத்தும் சாதி வேற்றுமையைக்
கடுமையாக கண்டிக்கிறார். “ சாதி இருக்கிறது என்பானும்
இருக்கின்றானே “ என கடிந்து உரைக்கிறார். பெண்ணுரிமை பற்றிப் பாடும்
போது “ பெண்ணடிமை தீராதவரை மண்ணடிமை தீராது “ என்னும்
கருத்தை வலியுறுத்துகிறார். “ கல்வியில்லாப் பெண் களர்நிலம் “ என்று
கூறி, பெண்கள் கல்வி கற்க வேண்டியதன்
அவசியத்தை எடுத்துரைக்கிறார்.
முடிவுரை
சமுதாயத்திற்குத் தேவையான சிறந்த கருத்துகளை நயம் மிக்க
கவிதைகளாகப் படைத்தவர் பாரதிதாசன். எனவே பாவேந்தர் பாரதிதாசன்
நான் விரும்பும் கவிஞர் ஆவார்.
click here to get pdf
click here