www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
இயல் : 2
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : இயற்கையைப் போற்றுவோம்.
அறிமுகம்:
இயற்கை அன்னை மனிதனுக்கு அளிக்கும்
கொடைகளையும், இயற்கையை
எப்படிக் காக்க வேண்டும் என்பதையும், சுற்றுப்புறச்
சூழல் மாசடையாமல் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
* இயற்கை வளங்கள் (மரம், செடி, நீர்நிலைகள்) குறித்த
நிழற்படங்கள் மற்றும் காணொலிகள்.
- சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அட்டைகள்.
நோக்கம்:
* இயற்கையின்
முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்தல்.
- சுற்றுச்சூழல்
பாதுகாப்பில் தமக்குள்ள பொறுப்புகளைப் புரிந்துகொள்ளுதல்.
ஆசிரியர் குறிப்பு:
மனித வாழ்விற்கு இயற்கை
இன்றியமையாதது. காடுகளின் அழிப்பு, புவி
வெப்பமடைதல் போன்ற தற்காலச் சிக்கல்களைப் பாடத்துடன் தொடர்புபடுத்தி, மாணவர்களிடையே இயற்கை
குறித்த நேர்மறைச் சிந்தனைகளை உருவாக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
·
இயற்கையைத்
தாயாகக் கருதி போற்றும் தமிழர்களின் மரபை விளக்குதல்.
·
இயற்கையோடு
இயைந்த வாழ்வே மனித குலத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை என்பதை
எடுத்துரைத்தல்.
செயல்பாடு (மாணவர்
செயல்பாடு):
·
பள்ளியைச்
சுற்றியுள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுதல்.
- இயற்கையைப்பற்றி
கவிதை அல்லது கட்டுரை எழுதி வகுப்பறையில் காட்சிப்படுத்துதல்.
மதிப்பீடு:
* LOT: இயற்கையின் கொடைகள் யாவை?
- MOT: நாம் ஏன் இயற்கையைப் போற்ற வேண்டும்?
- HOT: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மாணவர்கள்
மேற்கொள்ளக்கூடிய மூன்று நடைமுறைச் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
கற்றல் விளைவுகள்::
- T803: படித்தவற்றைப்பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள்
எழுப்பி புரிதலை மேம்படுத்திக்கொள்ளல்.
- T818: தமது சொந்த அனுபவங்களை தமக்கே உரிய மொழிநடையைப்
பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் (பாடல்/கட்டுரை) எழுதுதல்.
- T821: படிப்பவரின் தரம், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை
மனதிற்கொண்டு பயன் விளையுமாறு தன்னைத் தானே வெளிப்படுத்துதல்.
தொடர் பணி:
"இயற்கையைப்
பாதுகாப்போம்" என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு சுவரொட்டியை (Poster) வடிவமைத்து வருக.
