www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
இயல் : 02
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பட்டமரம்
அறிமுகம்:
மரம் மனித
வாழ்வின் இன்றியமையாத அங்கமாகும். பட்டுப்போன மரமொன்றைக் கண்டு கவிஞர் தமிழ்ஒளி
கொள்ளும் வருத்தத்தையும், இயற்கையைப் பேண வேண்டியதன்
அவசியத்தையும் இப்பாடம் உணர்த்துகிறது.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்.
- பட்டுப்போன மரத்தின் நிழற்படம் அல்லது அதன் ஓவியம்.
நோக்கம்:
- மரங்களின் சிறப்பை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்கும்
மனப்பான்மையை வளர்த்தல்.
- கவிதையின் மூலம் கவிஞரின் வருத்தத்தைப்
புரிந்துகொண்டு இயற்கையின் மீது அன்பு செலுத்துதல்.
ஆசிரியர் குறிப்பு:
கவிஞர்
தமிழ்ஒளி பாரதியாரின் கவிமரபு வழி வந்தவர் என்பதையும், மரம் என்னும் உயிர் பட்டுப்போனதால் ஏற்படும் துன்பத்தை அவர்
உணர்ச்சிகரமாகப் பாடியுள்ளதையும் விளக்குதல். மரம்
வெட்டப்படுவதால் ஏற்படும் சூழலியல் மாற்றங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
·
இலைகளும் கிளைகளும் இன்றி வாடிய மரத்தின் நிலையை
விவரித்து, மரம் தன் அழகையும் பயனையும் இழந்ததால் கவிஞர் வருந்தும்
சூழலை விளக்குதல்.
·
சிறுவர்கள் குதிரை ஓட்டி விளையாடிய மரத்தின் பொற்காலம்
இன்று வெறும் கனவாக முடிந்தது என்ற கவிஞரின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ளுதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மரங்களின் பயன்கள் குறித்து வகுப்பறையில்
கலந்துரையாடுதல்.
- மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப்
பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
- LOT: மரத்தின் உடையாகக்
குறிப்பிடப்படுவது எது?
- MOT: பட்டமரம் ஏன் தனது அழகை
இழந்தது?
- HOT: மரங்கள் பட்டுப்போகாமல்
காக்க நீங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகள் யாவை?
கற்றல் விளைவுகள்::
- T801: பாடப்பொருள் குறித்த
உரையாடல் மூலம் மரத்தின் விவரிப்புகளைப் புரிந்து கொள்ளுதல்.
- T807: பாடலைப் படித்து ஆய்வு
செய்து சூழலியல் மாற்றங்கள் போன்ற குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.
- T812: படைப்பாளியின்
சொற்சித்திரத்தை நயம்படப் பாராட்டுதல்.
தொடர் பணி:
மரங்கள்
வெட்டப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறு கட்டுரை எழுதி வருக.
