அரசு பொதுத் தேர்வு - 2024- 2025
பத்தாம் வகுப்பு
தமிழ்
வினாத்தாள்
___________________________________________________________________________________
அரசு பொதுத் தேர்வு – 2024-25
28-03-25
பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I ( மதிப்பெண்கள்
: 15 )
i)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15×1=15
1. ‘விருந்தினரைப் பேணுவதற்குப்
பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்
என்கிறது புறநானூறு’ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை_________
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து ஈ)
உற்றாரின் விருந்து
2. தொடர்களை முழுமை செய்வதற்குப்
பொருத்தமான தொழிற்பெயர்களைத் தெரிவு செய்க.
பொது வாழ்வில் ________ கூடாது. __________ இல்
அவரை மிஞ்ச ஆள் கிடையாது.
அ) புதையல், புதைத்தல் ஆ) சுட்டல், சுடுதல்
இ)
நடித்தல், நடிப்பு ஈ) காணுதல்,காட்சி
3. வாய்மையே மழை
நீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி
அ)
உவமை ஆ)
தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
4. வெண்பா
________________ ஓசை உடையது.
அ)
செப்பல் ஆ) அகவல் இ) துள்ளல் ஈ) தூங்கல்
5. இரு நாட்டு அரசர்களும்
தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம் ___________
அ)
நாட்டைக் கைபற்றுதல் ஆ)
ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ)
கோட்டையை முற்றுகையிடல்
அ)
இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ)
தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
7. பூக்கையைக் குவித்துப்
பூவே புரிவோடு காக்க என்று
------வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத்,
தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக
8. வீசுதென்றல் – தொகையின் வகையைத் தேர்க.
அ)
வேற்றுமைத் தொகை ஆ)
வினைத் தொகை
இ)
பண்புத் தொகை ஈ)
உவமைத் தொகை
9. பின்வருவனவற்றுள் முறையான
தொடர்.
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
10. சுதந்திர இந்தியாவின்
மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம்
ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
11. பொருத்தமானதைக் கொண்டு
பழமொழியை நிறைவு செய்க.
அ)
குப்பையிலே ஆ) உள்ளளவும் இ) மூன்று நாள் ஈ) ஒரு சோறு பதம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-
“ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “
12. பாடல் இடம் பெற்ற நூலைத் தேர்க.
அ.
நற்றிணை ஆ. பரிபாடல் இ. முல்லைப்பாட்டு ஈ. மலைபடுகடாம்
13. இப்பாடல் இடம்பெற்றுள்ள அடிமோனையைத் தேர்க.
அ.
உருஅறி – உந்துவளி ஆ. கருவளர் - உருஅறி
இ.
விசும்பில் – கருவளர் ஈ. உருஅறி – கிளர்ந்த
14. ‘ ஊழ் ஊழ் ‘ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க_______
அ.
உரிச்சொல்தொடர் ஆ. பெயரெச்சத்
தொடர்
இ.
வினையெச்சத் தொடர் ஈ. அடுக்குத்
தொடர்
15. பாடலின் ஆசிரியரைத் தேர்க_____
அ.
இளங்கோவடிகள் ஆ. பரஞ்சோதி முனிவர்
இ.
கீரந்தையார் ஈ. பெருங்கெளசிகனார்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்
16. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும்.
அ. புதிய படைப்புகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவுகிறது?
ஆ. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்
18. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்
யாவர்?
19. நச்சப் படாதவன் செல்வம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப்
பொருள் தருக.
20. குறிப்பு வரைக – அவையம்
21. ‘ பொருள் ‘ என முடியும் திருக்குறளை
எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?
இதோ
…….. இருக்கிறதே!
சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம்
வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின்
வகைகளை எடுத்தெழுதுக.
23. வினைமுற்றை வினையாலணையும் பெயராக
மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
அ) ஊட்டமிகு உணவு உண்டா. அவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார்.
ஆ) பொது அறிவு நூல்களைத் தேடிப்
படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
24. பகுபத உறுப்பிலக்கணம் தருக. கிளர்ந்த
25. கலைச்சொற்கள் தருக: அ)
CLASSICAL LITERATURE ஆ) EMBLEM
குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
( தங்கும், அவிழும், தயங்கும் , கவிழும் )
மலை முகட்டில் மேகம் ________________ அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் ________________
26. மரபுத் தொடருக்கான பொருளறிந்து, தொடரில் அமைக்க.
(அ ) கண்ணும் கருத்தும் (ஆ)
அள்ளி இறைத்தல்
27. தீவக அணியின் வகைகள் யாவை?
28 புதிர்களுக்குரிய பொருத்தமான சொற்களை எடுத்தெழுதுக.
அ) நாலெழுத்தில் கண் சிமிட்டும்
– கடையிரண்டில் நீந்திச் செல்லும்
ஆ) ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில்
வனம்
( காடு, புதுமை, விண்மீன், காற்று, நறுமணம் )
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு
கொன்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம்
மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல்
இதழ் ஒன்றுக்கு ‘ எதிர்காலத் தொழில் நுட்பம் ‘ என்ற தலைப்பில் எழுதுக.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி
அவர்கள், நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம்
கொண்டு செல்ல விரும்பியதற்குக் காரணமுண்; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவனல்லன்;
ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த
எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உணடென்றால், அது
சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன். இளங்கோ தந்த சிலம்பு,
தமிழினத்தின் பொதுச் சொத்து. எனவே தான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார
மாநாடுகள் நடத்தினோம்” என்று கூறினார்.
அ)
சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
ஆ)
தமிழினத்தின் பொதுச் சொத்து எது?
இ)
பத்தியில் இடம் பெறும் இரண்டு நூல்களின் பெயர்களை எழுதுக.
31. சோலைக்( பூங்கா ) காற்றும் மின் விசிறிக்
காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
பிரிவு – II
குறிப்பு :எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். வினா எண். 34க்கு கட்டாயமாக விடையளிக்க
வேண்டும். 2×3=6
32. “ மாளாத காதல் நோயாளன் போல் “ என்னும்
தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
33. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத்
தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
34. அடிபிறழாமல் எழுதுக
அ) “ வெய்யோனொளி “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக (அல்லது )
ஆ) “ அன்னை மொழியே “ – எனத் தொடங்கி ‘ மண்ணுலகப் பேரரசே ‘
என முடியும் அன்னைமொழியே பாடல்.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக்
கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின்
வழி விளக்குக.
36. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும்
அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியை
விளக்குக.
37. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும்
நாடு கெடும் - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38.அ) கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக்
கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
( அல்லது )
ஆ) வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக்
குறள்வழி விளக்குக.
39. நீங்கள் பல்பொருள் அங்காடி ஒன்றில் வாங்கிய உணவுப் பொருள் குறிப்பிட்ட தேதியைத்
தாண்டி, கெடுநாள் முடிந்ததாக இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டு
கடிதம் எழுதுக ( அல்லது )
ஆ.
கலைத்
திருவிழாவில் மாநில அளவில் நடைபெற்ற நடனப்போட்டியில் வெற்றிபெற்ற உங்கள் நண்பனைப் பாராட்டிக்
கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கவினுற எழுதுக.
41.எண் 20, பாரதிதாசன் நகர், விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும்
கலைச்செல்வியின் மகள் கவிதா விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார்.
தேர்வர் தன்னை கவிதாவாக எண்ணிக் கொடுக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்
படிவத்தை நிரப்புக.
42. இன்சொற்களைப் பேசுவதால் ஏற்படும் நன்மைகள் ஐந்தினை எழுதுக.
( அல்லது )
ஆ) மொழிபெயர்க்க.
1. Education is what remains after one has forgotten what one has
learned in school – Albert Einstein
2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb
3. It is during our darkest moments that we must focus to see the light
– Aristotle
4. Success is not final, failure is not fatal. It is the courage to
continue that counts – Winston Churchill
5. Language is the road map of a culture. Is tells you where its people
come from and where they are going – Rita Mae Brown
குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக.
“ மேற்கு
என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்;
மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன்; வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால்
வெப்பக் காற்றாகிறேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து
வீசும்போது நான் வாடைக் காற்று எனப்படுகிறேன்.நான் பணிப்பகுதியிலிருந்து வீசுவதால்
மிகவும் குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்” என்று காற்று பேசியது.
( I ) மேற்கிலுருந்து வீசும் காற்று யாது?
( ii ) ஊதைக்காற்று என்று அழைப்பதேன்?
( iii ) ‘ மேற்கு ‘ என்பதன் மற்றொரு பெயர் யாது?
( iv ) ‘ வாடை ‘ என்பது எத்திசையைக் குறிக்கிறது?
( v ) இப்பகுதிக்கு ஏற்ற தலைப்பு தருக.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43.அ) போராட்டக் கலைஞர் – பேச்சுக்
கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு
கட்டுரை எழுதுக. ( அல்லது )
ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை விரிவாக எழுதுக.
44. அ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம்,
அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை
விவரிக்கவும். ( அல்லது )
ஆ) கடின உழைப்பாளர் – சிறப்புமிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள்
கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளை விவரித்து எழுதுக.
45.அ) குறிப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் சென்று வந்த பொருட்காட்சியைப்
பற்றிக் கட்டுரை எழுதுக
முன்னுரை-
நுழைவாயில்
– புத்தக, வேளாண்மை, கேளிக்கை, போக்குவரத்து அரங்குகள் – பொழுதுபோக்கு அமைவிடங்கள் – உணவுக் கூடங்கள்
– முடிவுரை.
( அல்லது )
ஆ) குறிப்புகளைப்
பயன்படுத்தி ‘ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் ‘ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
முன்னுரை – பிறப்பு – கல்வி – விண்வெளி ஆர்வம் – சாதனைகள் – முடிவுரை.
எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.
KINDLY WAIT FOR 10 SECONDS