www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
இயல் : 02
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : வெட்டுக்கிளியும் சருகுமானும்
அறிமுகம்:
காடர்கள்
என்னும் பழங்குடியினரின் கதைகள் வாயிலாக, ஒரு சூழலில் காட்டும் விவேகத்தையும்,
வாக்குறுதி மீறினால் ஏற்படும் விளைவுகளையும் விளக்கும் கதை இது.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்.
- காடு, சிறுத்தை, வெட்டுக்கிளி
மற்றும் சருகுமான் ஆகியவற்றின் படங்கள்.
நோக்கம்:
- சிறு விலங்குகளின் இயல்புகளையும், காட்டிலுள்ள சூழலையும் அறிந்துகொள்ளுதல்.
- சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதன் அவசியத்தை உணர்தல்.
- பழங்குடியினரின் வாய்மொழி இலக்கியங்களைச் சுவைத்தல்.
ஆசிரியர் குறிப்பு:
பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வாழும் காடர்களின் "ஆல்அலப்பு" மொழியையும்,
அவர்களின் வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்துதல். வெட்டுக்கிளியின் வாயாடித் தன்மையால் ஏற்பட்ட சிக்கலையும், சருகுமானின் கூச்ச சுபாவத்தையும் ஒப்பிட்டு விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
பித்தக்கண்ணுவிடமிருந்து தப்பிக்க சருகுமான் ஒளிந்திருந்த நிலையில், வெட்டுக்கிளி வாக்குறுதியை மீறி நடந்துகொண்டதால் சருகுமான் பிடிபட
வாய்ப்பு ஏற்பட்டதை விளக்குதல். இறுதியில் சருகுமான்
தப்பித்தாலும், வெட்டுக்கிளிக்குக் கொடுத்த எச்சரிக்கையினால்
இன்றும் வெட்டுக்கிளிகள் நிலைத்து இருக்க முடியாமல் குதித்துக் கொண்டே இருப்பதை
நகைச்சுவையாகக் கூறுதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- இக்கதையை மாணவர்கள் கதாபாத்திரங்களாகப் பிரிந்து
நாடகமாக நடித்துக் காட்டுதல்.
- "சொன்ன சொல்லைக்
காப்பாற்றுதல்" குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.
மதிப்பீடு:
- LOT: காடர்கள் வசிக்கும்
பகுதி எது?
- MOT: வெட்டுக்கிளியும்
சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.
- HOT: ஏன் வெட்டுக்கிளிகள்
இன்றும் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்துக் கொண்டே
இருக்கின்றன?
கற்றல் விளைவுகள்::
- T804: தமது சுற்றுப்புறத்தில்
வழங்கும் நாட்டுப்புறக் கதைகளைப் பற்றி பேசுதல்.
- T805: படித்தவற்றைப்பற்றிச்
சிந்தித்து, புதிய நிகழ்வுகளைக் கற்பனை செய்து
உருவாக்கி வெளிப்படுத்துதல்.
தொடர் பணி:
இக்கதையில்
வரும் பாத்திரங்களுக்குப் பதில், நீங்கள் ஒரு பாத்திரமாக இருந்தால்
அந்தச் சூழலில் என்ன செய்திருப்பீர்கள்? என்பதை எழுதி வருக.
