8TH-TAMIL-UNIT-1-THAMIZH VARI VADIVA VALARCHI- NOTES OF LESSON

   

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஜூன்

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       தமிழ் வரிவடிவ வளர்ச்சி

அறிமுகம்:

மனிதன் தன் கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மொழியைக்

 கண்டுபிடித்ததையும், மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை

 உருவாக்கியதையும், காலந்தோறும் தமிழ் எழுத்துகளில் ஏற்பட்டுள்ள

 மாற்றங்களையும் அறிந்துகொள்ளுதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • பழைய தமிழ் வரிவடிவங்கள் மற்றும் தற்போதைய எழுத்துகளை ஒப்பிடும் விளக்கப்படம். காணொளிக்காட்சிகள், எழுத்து அட்டவணை

  நோக்கம்:

  • தமிழ் எழுத்துகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலைகளை அறிந்துகொள்ளுதல்.
  • எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவையை உணர்தல்.
  • வீரமாமுனிவர் மற்றும் தந்தை பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்ளுதல்.

  ஆசிரியர் குறிப்பு:

·     ஓவிய எழுத்து, ஒலி எழுத்து வடிவங்களின் தொடக்கத்தை விளக்குதல்.

·     கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்து, தமிழி எழுத்துகளின் வேறுபாடுகளைக் கற்பித்தல்.

·     வீரமாமுனிவர் மற்றும் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்கள் நவீன கணினிப் பயன்பாட்டிற்குத் தமிழை எவ்வாறு ஏதுவாக்கின என்பதை வலியுறுத்துதல்.

  கருத்துரு வரைபடம்:

  விளக்கம்:

எழுத்துகளின் வரிவடிவ மாற்றங்கள் எழுதப்படும் பொருள்களின் தன்மை (கல், ஓலை), அழகுணர்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்டதை விளக்குதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • பழைய வரிவடிவச் சொற்களை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதும் பயிற்சி.
  • எழுத்துச் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்த குழு விவாதம்.

  மதிப்பீடு:

  • LOT: தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெறக் காரணமாக அமைந்தது எது?
  • MOT: வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் இரண்டினை விளக்குக.
  • HOT: தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவன யாவை?

  கற்றல் விளைவுகள்::

  • T811: படித்த பிறகு பல்வேறு எழுத்தியியல் நடைகளையும், முறைகளையும் (விவரண முறை, இயற்கை அழகின் வர்ணனை முறை போன்றவை) இனங்காணுதல்.
  • T813: தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் இணையதளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.

  தொடர் பணி:

உரைநடைப் பகுதியில் உள்ள பழைய வரிவடிவங்களை அடையாளம் கண்டு, இன்றைய தமிழ் எழுத்துகளுடன் ஒப்பிட்டு ஒரு அட்டவணை தயார் செய்து வருக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post