8TH-TAMIL-UNIT-1-THAMIZH AAZHIKKU ENAI- NOTES OF LESSON

   

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com 

மாதம்               :       ஜூன்

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       ஆழிக்கு இணை

அறிமுகம்:

சந்தக்கவிமணி தமிழழகனார், தமிழையும் கடலையும் ஒப்பிட்டு, இரட்டுறமொழிதல் (சிலேடை) அணி மூலம் பாடிய பாடலை அறிந்துகொள்ளுதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • தமிழ் மற்றும் கடல் ஆகியவற்றின் ஒற்றுமையை விளக்கும் ஒப்பீட்டு விளக்கப்படம்.

நோக்கம்:

  • இரட்டுறமொழிதல் அணியின் சிறப்பை உணர்தல்.
  • தமிழின் சிறப்புகளையும் (முத்தமிழ், முச்சங்கம், காப்பியம்), கடலின் சிறப்புகளையும் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளுதல்.

ஆசிரியர் குறிப்பு:

தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம் என்பதையும், அவர் ஏன் 'சந்தக்கவிமணி' என்று அழைக்கப்படுகிறார் என்பதையும், பாடலின் பொருள் இருபொருள் தருமாறு அமைந்துள்ள சிலேடை நயத்தையும் விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

 

விளக்கம்:

 தமிழையும் கடலையும் ஒரே பாடலில் இரட்டுறமொழிதல் அணியின் மூலம் ஒப்பிட்டு, இவ்விரண்டின் மேன்மைகளையும் கவிஞர் விளக்குவதைக் கூறல்.

 செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • பாடலைச் சீர்பிரித்துப் பொருள் உணர்ந்து வாசித்தல்.
  • தமிழ் மற்றும் கடல் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் ஒத்த பண்புகளைப் பட்டியலிடுதல்.

மதிப்பீடு:

  • LOT: தமிழ்த்தாய் எவற்றை அணிகலன்களாக அணிந்துள்ளாள்?
  • MOT: இரட்டுறமொழிதல் அணி என்றால் என்ன?
  • HOT: தமிழுக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

  கற்றல் விளைவுகள்::

  • T810: படித்தவற்றில் காணப்படும் சொற்கள் மற்றும் மரபுத்தொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
  • T822: பாடல், கட்டுரை எழுதும் போது பல்வேறு புலப்பாட்டு உத்திகளை (இங்கு இரட்டுறமொழிதல் அணி) இனம் கண்டு பயன்படுத்துதல்.

தொடர் பணி:

இருபொருள் தரும் (சிலேடை) சொற்களைச் சேகரித்து, அவற்றுக்கான இரு பொருள்களையும் எழுதி வருக.

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post