www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : தமிழ் மொழி வாழ்த்து
அறிமுகம்:
பாரதியார்
இயற்றிய "தமிழ்மொழி வாழ்த்து" பாடலின் மூலம், தமிழின் தொன்மை, அதன் வளம் மற்றும்
தமிழின் சிறப்பை இக்கால இளைய தலைமுறைக்கு உணர்த்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- பாடநூல் (எட்டாம் வகுப்பு)
- பாரதியாரின் புகைப்படம் மற்றும்
கவிதைகள் அடங்கிய தொகுப்பு
- பாடத்தின் பொருளடக்கம் மற்றும்
சொல் விளக்கம் குறித்த அட்டைகள்
நோக்கம்:
- தமிழ்மொழியின் சிறப்பினை
மாணவர்கள் உணர்தல்.
- செய்யுளைப் படித்து அதன்
நயங்களை (எதுகை, மோனை, இயைபு) போற்றும்
திறன் பெறுதல்.
- தமிழ்மொழியின் மேன்மையை
உணர்ந்து போற்றிப் பாடும் ஆர்வம் பெறுதல்.
ஆசிரியர்
குறிப்பு:
பாரதியாரின்
பன்முக ஆற்றலையும், "தமிழ்மொழி
வாழ்த்து" கவிதையின் பொருளையும்,
அதில்
கையாளப்பட்டுள்ள எதுகை, மோனை, இயைபு ஆகிய தொடைகளின்
சிறப்பையும் விளக்குதல்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
பாரதியார்
தமிழ்த்தாயை எக்காலத்தும் நிலைபெற்று வாழும்படி வாழ்த்துகிறார். அறியாமை இருள்
நீங்கி, தமிழ்மொழி மேன்மையுற்று, உலகம் முழுதும் ஒளிர
வேண்டும் என்று பாடுகிறார்.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் பாடலை இசையுடன்
பாடுதல்.
- பாடலில் உள்ள எதுகை, மோனை, இயைபு சொற்களைப்
பட்டியலிடுதல்.
- தமிழ்மொழியின் சிறப்புகள்
குறித்த கலந்துரையாடல்.
மதிப்பீடு:
- LOT (குறைந்தநிலை
சிந்தனை): பாரதியார்
தமிழை எவ்வாறு போற்றுகிறார்?
- MOT (நடுநிலை
சிந்தனை): பாடலின்
பொருளைச் சுருக்கமாகக் கூறுக.
- HOT (உயர்நிலை
சிந்தனை): பாரதியார்
தமிழை "வண்மொழி" என்று அழைக்கக் காரணம் என்ன?
கற்றல்
விளைவுகள்::
- T810: படித்தவற்றில்
காணப்படும் சொற்கள், மரபுத்தொடர்களைப்
புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்.
- T816: மொழி
பற்றிய நுட்பங்களை அறிந்து, பாடலின்
சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்து கொள்ளுதல்.
தொடர்
பணி:
தமிழ்மொழி
வாழ்த்துப் பாடலை மனப்பாடம்
செய்து
வருதல்.
.__________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
