10th Tamil Important Questions 2026 | 50 Marks Special Test for Slow Learners-pdf

 


 பத்தாம் வகுப்பு

மெல்லக் கற்கும் மாணவர்கள்

சிறப்பு அடைவுத் தேர்வு-1-2026

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 60 நிமிடம்                                                                                             மதிப்பெண் : 50

பகுதி - 1

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                                 35X1=35

1. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது --------

அ) சுட்டிஆ) கிண்கிணிஇ) குழைஈ) சூழி

2. நன்மொழி என்பது _________

அ) பண்புத்தொகைஆ) உவமைத் தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை

3. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

அ) இட வழுவமைதிஆ) பால் வழுவமைதிஇ) திணை வழுவமைதிஈ) கால வழுவமைதி

4. சித்திரை, வைகாசி மாதங்களை ____________ காலம் என்பர்.

அ) முதுவேனில்ஆ) பின்பனிஇ) முன்பனிஈ) இளவேனில்

5. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?

அ) உதியன்;சேரலாதன்ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன்;கிள்ளிவளவன்ஈ) நெடுஞ்செழியன்;திருமுடிக்காரி

6. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _________

அ) எந் + தமிழ் + நாஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நாஈ) எந்தம் + தமிழ் + நா

7. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்         ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்       ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

8. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது.

அ) வேற்றுமை உருபுஆ) எழுவாய்இ) உவம உருபுஈ) உரிச்சொல்

9. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

10. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ____

அ) குலைப்பெயர் வகைஆ) மணிப்பெயர் வகை

இ) கிளைப்பெயர் வகைஈ) இலைப்பெயர் வகை

11. காசிக்காண்டம் என்பது ______

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

12.மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ“ இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.

அ) கருமைஆ) பச்சைஇ) பழுப்புஈ) நீலம்

13. மேன்மை தரும் அறம் என்பது ______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

14. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம்ஆ) நீவிர்இ) அவர்ஈ) நாம்

15. பரிபாடல் அடியில் ‘விசும்பில் இசையில்‘ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும்          ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்                ஈ) வானத்தையும் பேரொலியையும்

16. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________

அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது       ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்    ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

17. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது                                                        அ) திருக்குறள்ஆ) புறநானூறுஇ) கம்பராமாயணம்ஈ) சிலப்பதிகாரம்

18. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?    

அ) திருக்குறள்ஆ) கம்பராமாயணம்இ) கலித்தொகைஈ) சிலப்பதிகாரம்

19. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ) ஒரு சிறு இசைஆ) முன்பின்இ) அந்நியமற்ற நதிஈ) உயரப் பறத்தல்

20. மகிழுந்து வருமா? என்பது         

அ) விளித்தொடர்ஆ)எழுவாய்த் தொடர் இ) வினையெச்சத் தொடர் ஈ) பெயரெச்சத் தொடர்

21. கூற்று 1 : போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது

அ) கூற்று 1 சரி 2 தவறு        ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி        ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

22. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….    

அ) உழவு,மண்,ஏர்,மாடு          ஆ) மண்,மாடு,ஏர்,உழவு

இ) உழவு,ஏர்,மண்,மாடு          ஈ) ஏர்,உழவு,மாடு,மண்

23.விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை  

அ) நிலத்திற்கேற்ற விருந்துஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து        ஈ) உற்றாரின் விருந்து

24. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ______ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்______

அ) அமைச்சர், மன்னன்        ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்       ஈ) மன்னன், இறைவன்

25. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று , வேண்டினார்.

அ) கருணையன் எலிசபெத்துக்காக            ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக                    ஈ) எலிசபெத் பூமிக்காக

26. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல்            ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்ஈ) கோட்டையை முற்றுகையிடல்

27. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே __________

அ) பாடிய;கேட்டவர்    ஆ) பாடல்;பாடிய         இ) கேட்டவர்;பாடிய    ஈ) பாடல்;கேட்டவர்

28. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) கொண்டல் - 1. மேற்குஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்குஈ) தென்றல் - 4. வடக்கு

அ) 1,2,3,4 ஆ) 3,1,4,2 இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2

29. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே
செய்தி 3 – இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கிறேன்.     

அ) செய்தி 1 மட்டும் சரி        ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி        ஈ) செய்தி 1,3 ஆகியன சரி

30.”தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

31. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

அ) பாண்டிய நாடு, சேர நாடு              ஆ) சோழநாடு, சேர நாடு

இ) சேரநாடு, சோழநாடு                      ஈ) சோழநாடு, பாண்டியநாடு

32.மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

அ) திருப்பதியும்,திருத்தணியும்          ஆ) திருத்தணியும்,திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்    ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

33. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் __

அ) அகவற்பாஆ) வெண்பாஇ) வஞ்சிப்பாஈ) கலிப்பா

34. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்

   அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___

) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும்   ) தாளும் ஓலையும்   ) சருகும் சண்டும்

35. இரவீந்தநாத தாகூர் _________ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ______ மொழியில், மொழிபெயர்த்த பிறகு தான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

அ) ஆங்கில, வங்காளம்                ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு                  ஈ) தெலுங்கு, ஆங்கில

பகுதி – 2

ஆ) விடைக்கேற்ற வினா அமைக்க:-                                                                           5X1=5

36. மேகசந்தேசம் என்ற காவியத்தை இயற்றியவர் காளிதாசன்.

37. கருத்துப் பகிர்வைத் தருவது மொழிபெயர்ப்பு ஆகும்.

38. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என பெருமைப்படுகிறார் பாரதியார்.

39. 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.

40. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.

பகுதி – 3

இ) அனைத்து வினாவிற்கும் விடையளிக்க.                                                                       2X5=10

41. எண் 20, பாரதிதாசன் நகர், விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் கலைச்செல்வியின் மகள் கவிதா விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை கவிதாவாக எண்ணிக் கொடுக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42.கடலூர் மாவட்டம், பாரதியார் நகர், கம்பர் தெருவிலுள்ள 112 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் நிலவன், வெண்மதி ஆகியோரின் மகள் பூங்குழலி, கடலூர் மாவட்த்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். அவர் அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் பயில விரும்புகிறார். அவர் மதிப்பெண் பட்டியல் பின்வருமாறு. பதிவெண் : 604050     ஆண்டு – 2024 – 25   மதிப்பெண்: தமிழ் – 98    ஆங்கிலம் – 98  கணிதம் -100  அறிவியல் – 100   சமூக அறிவியல் – 100. தேர்வர் தம்மை பூங்குழலியாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post