ஒன்பதாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
5.1 பத்தியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக
1️⃣ ‘ஓர் அறையின் நூற்றாண்டு இருளைப் போக்கிடும் விளக்கு போல’ – என்ற தொடர் உணர்த்துவதைத் தெரிவு செய்க.
👉 வாழ்க்கையின் அறியாமை இருளைப் போக்க உதவினார்.
2️⃣ தமிழின் மேன்மைகளை எடுத்துரைக்க எவை உதவின?
👉 ஆங்கிலமொழிக்கல்வி, தமிழ்மொழிக்கல்வி, மேல்நாட்டுக் கலைகள், தமிழ்க்கலைகள், மேலைத் தொழில்நுட்பம், தமிழ்த்தொழில்நுட்பம், ஆங்கிலக் கலைச்சொற்கள், தமிழ்க்கலைச்சொற்கள்.
3️⃣ மாணவருக்குள் நடைபெற்ற மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது எது?
👉 மொழி என்பது மூச்செனக் கொள்ளப்பட வேண்டியது என்பதை வலியுறுத்தினார். மூச்சின் மேல் விருப்பம் தான் கொள்ள முடியும்; வேறு வழியில்லை என்பதை உணர்த்தினார்.
4️⃣ பத்தியிலுள்ள அடுக்குத்தொடர்களை எடுத்தெழுதுக.
👉 படிப்படியாக, திறக்கத் திறக்க, நினைக்க நினைக்க
5.2 பின்வரும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
1️⃣ விளம்பரத்திற்குப் பொருந்தாத தொடர் எது?
👉 பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
2️⃣ புத்தகத் திருவிழா எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
👉 10 நாட்கள்
3️⃣ மகிழினிக்கும் நிறைமதிக்கும் புத்தகத் திருவிழாவில் 400 ரூபாய் மதிப்பில் அவர்கள் விரும்பிய இரண்டு நூல்கள் விலையின்றிக் கிடைத்தது எப்படி?
👉 பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பதிப்பகத்திலிருந்து ரூ.200 மதிப்புள்ள நூல்கள் கிடைத்தது.
4️⃣ அறிவன் மாலை 6.30 மணிக்குப் புத்தகத் திருவிழாவிற்குச் செல்கிறான். அவன் என்னென்ன நூல்கள் வாங்கியிருப்பான்?
👉 அவன் புத்தகங்களை வாங்கி இருக்க முடியாது. ஏனெனில் புத்தகத் திருவிழா மாலை 6 மணி வரை மட்டுமே நடைபெறுகிறது.
5️⃣ ‘புத்தகம் படிப்போம்! புதியன அறிவோம்!’ – போன்ற விழிப்புணர்வுத் தொடர்கள் இரண்டினை எழுதுக.
👉 “நூல் நண்பன் – நம் நல்வழி நெறியன்!”
👉 “ஒவ்வொரு பக்கமும் புதிய உலகம்!”