பத்தாம் வகுப்பு - மாதிரி வினாத்தாள்
மாதிரி ஜூன் மாதத் தேர்வு – 2025
10 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
அ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 7×1=7
1.
காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்_________
அ)
இகந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ)
என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ)
இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ)
என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
2. . காய்ந்த இலையும்,காய்ந்த
தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி
குறிப்பிடுவது ___
அ)
இலையும்,சருகும் ஆ)
தோகையும் சண்டும்
இ)
தாளும் ஓலையும் ஈ)
சருகும் சண்டும்
3.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _________
அ)
எந்
+ தமிழ் + நா ஆ)
எந்த
+ தமிழ் + நா
இ)
எம்
+ தமிழ் + நா ஈ)
எந்தம்
+ தமிழ் + நா
4.
உலகத்
தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்
அ) பெருஞ்சித்திரனார் ஆ) பாரதியார்
இ) அப்பாதுரையார் ஈ) பாவாணர்
5. சாகும்
போது தமிழ்படித்துச் சாக வேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் எனக்
கூறுபவர் –
அ)
க.சச்சிதானந்தன் ஆ) பெருஞ்சித்திரனார்
இ)
பாவாணர் ஈ) அப்பாதுரையார்
6.
எறும்புந்தன் கையால்
எண் சாண் – இத்தொடரில் காணும் எண்ணுப்பெயரைத் தேர்க
அ)
சாண் ஆ) எறும்பு இ) எண் ஈ) கை
7. நதிவெள்ளம்
காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை எனப் பாடுபவர் –
அ) கண்ணதாசன் ஆ)
கம்பர்
இ) பாரதியார் ஈ)
பெருஞ்சித்திரனார்
ஆ. எவையேனும் எட்டு
வினாக்களுக்கு விடையளிக்க. 8×2=16
8.
விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ) திரைப்படப்பாடல்கள்
வழியே மெய்யிலை மக்களிடையே கொண்டுச் சேர்த்தவர் கண்ணதாசன்
ஆ) 1554
இல் முதன் முதலாக தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்
கார்டிலா ஆகும்
9. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும்
இடையே உள்ள வேறுபாடு இரண்டினை எழுதுக
10. “ கொள்வோர்
கொள்க; குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது – பாடல் அடிகளில்
உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக
11. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
12.கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களை எழுதுக.
அ) பழம் ஆ) கல்
13. படிப்போம்; பயன்படுத்துவோம்:-
அ) Discussion ஆ) Monolingual
14.
பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் நான்கினை எழுதுக.
15. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து
எழுதுக.
அ).கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை
அழைத்து வாருங்கள்.
ஆ)ஊட்டமிகு
உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
16 எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.
செய்யுள் அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ் எண் |
நாற்றிசையும் செல்லாத நாடில்லை |
|
|
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி |
|
|
17. மன்னும் சிலம்பே!மணிமே
கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில்
இடம் பெற்றுள்ள
காப்பியங்களின்
பெயர்களை எழுதுக.
இ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 3×3=9
18.அ) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன
யாவை? (அல்லது)
இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி
எழுதுக.
19. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
( அல்லது )
ஆ)
தீய சொல் வழி |
|
பிறர் மனம் மகிழும் அறம் வளரும் புகழ் பெருகும் நல்ல நண்பர்கள் சேருவர் அன்பு நிறையும் |
பிறர் மனம் வாடும் அறம் தேயும் இகழ் பெருகும் நல்ல நண்பர்கள் விலகுவர் பகைமை நிறையும் |
இதில் நீங்கள் செல்லும் வழி யாது?
உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
20. அன்னை மொழியே
பாடலை எழுதுக.
ஈ ) எவையேனும் இரண்டனுக்கு விடையளி 2×4=8
22. நயம் பாராட்டுக
தேனினும்
இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே - கா.நமச்சிவாயர்
23. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில்
அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன் ; சுற்றும் முற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். இத்தொடர்களில்
உள்ள வினைமுற்றுகளை தனியே எடுத்தெழுதி தொழிற்பெயர்களாக மாற்றுக.
உ) படிவம் நிரப்புக 1×4=4
24. வேலூர் மாவட்டம், எண் -7 , பாரதி தெரு,
ஊசூரில் வசிக்கும் தந்தை ரவி , தாய் பரிமளா என்பவர்களின் மகன் தமிழ்செல்வன் என்பவர்
பிறந்த தேதி 01-01-2000,அவர் ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற விளையாட்டு ஆணையத்தில்
உறுப்பினராக சேர விரும்புகிறார். அன்னாரின் இணைய வழி படிவத்தை நிரப்புக.
ஊ) விரிவாக விடையளி 1×6=6
25. அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று
விளக்குக. ( அல்லது )
இக்கருத்தைக்
கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.