www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : முதல் பருவம்
மாதம் : ஜூலை
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : விலங்குகள் உலகம்
அறிமுகம்:
காடு
பல்லுயிர்களின் வாழ்விடமாகும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில்
வனஅலுவலர் ஒருவருடன் ஆதினி மற்றும் அவள் தாய் மேற்கொள்ளும் காட்டுப் பயணத்தின்
வாயிலாக, வனவிலங்குகளின்
இயல்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- களக்காடு முண்டந்துறை புலிகள்
காப்பகம் மற்றும் வனவிலங்குகளின் புகைப்படங்கள்.
- யானை (ஆசிய/ஆப்பிரிக்க), கரடி, புலி மற்றும்
புள்ளிமான்கள் அடங்கிய தொகுப்புப் படங்கள்.
நோக்கம்:
- காட்டுயிரிகள் மற்றும்
சுற்றுச்சூழலுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ளுதல்.
- வனவிலங்குகளின் தனித்துவமான
பண்புகள் மற்றும் வாழ்விடங்களைப் பற்றி அறிதல்.
- வனவிலங்குகள் மீதான
ஆர்வத்தையும், இயற்கையைப்
பாதுகாக்கும் உணர்வையும் வளர்த்தல்.
ஆசிரியர்
குறிப்பு:
காடுகளின்
செழிப்புக்கு வனவிலங்குகள் எவ்வாறு உதவுகின்றன என்பதையும், மனிதன் காடுகளின் மரபுத்
தொடர்ச்சியைப் புரிந்துகொள்வதன் அவசியத்தையும் ஆசிரியர் விளக்க வேண்டும்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
யானைகளின்
சமூக வாழ்க்கை, கரடியின்
உணவுப் பழக்கம், புலிகளின்
தனித்த வாழும் இயல்பு மற்றும் காட்டின் வளத்தை உறுதி செய்யும் புலி எனப் பல்வேறு
வனவிலங்குகளின் வாழ்வியல் நுட்பங்களை இப்பாடம் விவரிக்கிறது.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- வனவிலங்குகள் தொடர்பான
பழமொழிகளைத் திரட்டிப் பட்டியலிடுதல்.
- காட்டு விலங்குகளின் படங்களைத்
திரட்டி அழகான படத்தொகுப்பு உருவாக்குதல்.
மதிப்பீடு:
- LOT (அறிதல்): தமிழ்நாட்டில்
வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
- MOT (புரிதல்): புலியைக் 'காட்டுக்கு அரசன்' எனச் சொல்லாமல், 'பண்புள்ள விலங்கு' என ஏன்
கூறுகிறார்கள்?
- HOT (சிந்தித்தல்): மனிதர்கள்
வனவிலங்குகளின் வழித்தடங்களில் குறுக்கிடுவதால் ஏற்படும் விளைவுகளைக்
குறித்து உங்கள் கருத்துகளைப் பதிவிடுக.
கற்றல் விளைவுகள்:
- T707: இயற்கை
சார்ந்த தலைப்புகள் தொடர்பாகத் தர்க்கரீதியான முடிவுகளை அளித்தல்.
- T710: பாடப்பொருள்
ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதிலுள்ள சிறப்புக்கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
- T713: பல்வேறு
வகையான கதைகள் மற்றும் கட்டுரைகளைப் படித்து அவற்றின் நடை மற்றும் வருணனைத்
தன்மைகளை இனங்காணல்.
தொடர் பணி:
- ஏதேனும் மூன்று வனவிலங்குகள்
பற்றிய செய்திகளைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுதுக.
- இந்திய வனமகன் ஜாதவ் பயேங்
குறித்து இணையம் மூலம் கூடுதல் செய்திகளைச் சேகரித்து வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
