7TH-TAMIL-1ST-TERM-UNIT-2-KAADU- NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஜூலை

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       காடு


அறிமுகம்:

  • காட்டின் வளமே நாட்டின் வளம் என்பதை உணர்த்தும் வகையிலும், காட்டின் குளிர்ச்சியையும் அங்கு வாழும் விலங்குகளின் மகிழ்ச்சியான சூழலையும் விவரிக்கும் சுரதாவின் கவிதையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • கவிஞர் சுரதாவின் உருவப்படம்.
  • காடு மற்றும் காட்டு விலங்குகளின் (மயில், யானை, குரங்கு) வண்ணப் படங்கள்.
  • கிளிக்கண்ணி பாவகையை விளக்கும் சொற்கள் அடங்கிய அட்டைகள்.

நோக்கம்:

  • காடுகளின் முக்கியத்துவத்தையும், இயற்கையின் எழிலையும் புரிந்துகொள்ளுதல்.
  • கவிஞர் சுரதாவின் கவிதை நடையையும், 'கிளிக்கண்ணி' பாவகையையும் அறிதல்.
  • காட்டு உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பை உணர்தல்.

ஆசிரியர் குறிப்பு:

  • காட்டை 'இயற்கை விடுதி' என்று கவிஞர் அழைப்பதன் உட்பொருளையும், உவமைக் கவிஞர் சுரதாவின் பன்முகத்தன்மையையும் மாணவர்களுக்கு விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

 

விளக்கம்:

  • கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் பூத்திருக்கும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். காட்டு விலங்குகள் யாவும் இயற்கையாகப் படைக்கப்பட்ட தங்குமிடத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன என்பதை கவிதை வரிகள் மூலம் விளக்குதல்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • "காடு" பாடலை உரிய சந்தத்துடன் இசையோடு பாடுதல்.
  • பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களைப் பட்டியலிடுதல்.

மதிப்பீடு:

  • LOT (அறிதல்): 'ஈன்று' என்னும் சொல்லின் பொருள் யாது?
  • MOT (புரிதல்): காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
  • HOT (சிந்தித்தல்): காட்டை 'இயற்கை விடுதி' என்று கவிஞர் கூறக் காரணம் என்ன? உங்கள் கருத்து என்ன?

கற்றல் விளைவுகள் :

  • T707: மழைக்காலங்களில் பசுமையான சூழலை ஏற்படுத்துதல் போன்ற இயற்கை சார்ந்த தலைப்புகள் அல்லது பிரச்சனைகள் குறித்துத் தருக்கவியல் முடிவுகளை அளித்தல்.
  • T713: பல்வேறு பாடல்களைப் படித்து அவற்றின் நடையையும் இயற்கை வருணனையையும் இனங்கானல்.
  • T716: பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல்/சொற்றொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

தொடர் பணி:

  • உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள மரம்/காடு குறித்த வருணனைகளை ஐந்து தொடர்களில் எழுதி வருக.
  • காடு குறித்த பிற கவிதைகளைத் திரட்டித் தொகுத்து வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post