7TH-TAMIL-1ST-TERM-UNIT-2-APPADIEY NIRAKATTUM ANTHA MARAM- NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஜூலை

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

---------------------------------------------------------------------------------------------------------

அறிமுகம்:

  • மரங்கள் மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம், ஆனால் அவற்றைப் பற்றிய இனிய நினைவுகள் என்றும் அழியாது என்பதை விளக்கும் ராஜமார்த்தாண்டனின் கவிதையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • கவிஞர் ராஜமார்த்தாண்டனின் உருவப்படம்.
  • நாவல் மரம் மற்றும் சிறுவர்கள் விளையாடும் காட்சி அடங்கிய பாடப்புத்தகப் படங்கள்.
  • மரம் சார்ந்த இயற்கை மற்றும் நினைவுகள் குறித்த புகைப்படங்கள்.

நோக்கம்:

  • மரங்களின் முக்கியத்துவத்தையும், இயற்கையின் மீதான பற்றையும் வளர்த்தல்.
  • கவிஞர் ராஜமார்த்தாண்டனின் கவிதை நடையை அறிமுகம் செய்தல்.
  • பழைய நினைவுகள் மற்றும் மரத்தின் மீதான பந்தத்தை மாணவர் உணர்தல்.

ஆசிரியர் குறிப்பு:

  • மரங்களின் பயன்களையும், அவை மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கவிஞர் எவ்வாறு விவரித்துள்ளார் என்பதை ஆசிரியர்கள் எடுத்துரைத்தல். மரங்கள் வீழ்ந்தாலும் அதன் நினைவுகள் மாறாது என்பதன் ஆழத்தை விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

  • ஊரின் வடகோடியில் இருந்த நாவல் மரம், பல தலைமுறைகளாகச் சிறுவர்களின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருந்தது.
  • அது இயற்கையின் அற்புதம். பேய்க்காற்றில் மரம் சாய்ந்தாலும், கவிஞரின் மனதில் அது மாமலைபோல என்றும் அப்படியே நிற்கிறது என்பதைப் பாடலின் பொருளாக விளக்குதல்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மரத்தின் நினைவுகள் குறித்து மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை விவரித்தல்.
  • பாடலில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களைக் கண்டறிந்து பட்டியலிடுதல்.

மதிப்பீடு:

  • LOT (அறிதல்): 'பரவசம்' என்னும் சொல்லின் பொருள் யாது?
  • MOT (புரிதல்): சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
  • HOT (சிந்தித்தல்): பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை? உங்கள் கருத்து என்ன?

கற்றல் விளைவுகள் :

  • T702: கவிஞர் வேறொரு சூழலில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொண்டு, தமது சொந்தக் கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிடுதல்.
  • T713: கவிதையின் வருணனை உணர்வு மற்றும் இயற்கை வர்ணனைத் தன்மைகளை இனங்காணல்.
  • T719: தனிப்பட்ட அனுபவங்களைச் சொந்த நடையில் தமக்குரிய மொழியில் வெளிப்படுத்துதல்.

தொடர் பணி:

  • உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதி வருக.
  • மரம் குறித்த மற்றுமொரு கவிதையைத் தேடித் தொகுத்து வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post