www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : முதல் பருவம்
மாதம் : ஜூன்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : எங்கள் தமிழ்
அறிமுகம்:
நாமக்கல்
கவிஞர் வெ. இராமலிங்கனாரின் கவிதை மூலம் தமிழ்
மொழியின் மென்மை, இனிமை, வளமை
மற்றும் அது வாழ்விற்குத் தரும் அன்பையும் அறத்தையும் மாணவர்களுக்கு
அறிமுகப்படுத்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
படம்.
- தமிழ் மொழியின் சிறப்புகளை விளக்கும்
வரைபடங்கள்/அட்டைகள்.
- கவிதை வரிகள் அடங்கிய அட்டைகள்.
நோக்கம்:
- தமிழ் மொழியின் பெருமைகளை உணர்தல்.
- நாமக்கல் கவிஞரின் ஆளுமையை அறிதல்.
- பாடலின் மையக்கருத்தை உள்வாங்கி, அன்பையும்
அறத்தையும் வாழ்வியல் நெறியாகக் கொள்ளுதல்.
ஆசிரியர்
குறிப்பு:
தமிழ்
மொழியின் தொன்மை, அதன் சிறப்பு மற்றும் நாமக்கல் கவிஞரின்
காந்தியக் கொள்கைகள் குறித்து ஆசிரியர் விரிவாக விளக்குதல்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
Ø அருள்
நெறிகள் நிரம்பிய அறிவைத் தரும் தமிழ் மொழி, தமிழ்
மக்களின் குரலாக ஒலிக்கிறது.
Ø பொருள்
பெறுவதற்காக யாரையும் புகழாமல், தம்மைப்
போற்றாதவரை இகழாமல் வாழும் மாண்பினை உணர்த்துகிறது.
Ø அன்பும்
அறமும் நிறைந்த தமிழ் மொழி, அச்சத்தைப் போக்கி இன்பம் தரும் தேன் மொழி
என்பதை விளக்குதல்.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் "எங்கள் தமிழ்" பாடலை
இசையுடன் பாடி மகிழ்தல்.
- பாடலில் உள்ள எதுகை, மோனைச்
சொற்களைக் கண்டறிதல்.
- நாமக்கல் கவிஞரைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தல் .
மதிப்பீடு:
- LOT (அறிதல்): 'நெறி' என்னும்
சொல்லின் பொருள் யாது?
- MOT (புரிதல்): தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல்
கவிஞர் கூறுவன யாவை?
- HOT (சிந்தித்தல்): கவிஞர் தமிழை ஏன் தேனுடன்
ஒப்பிடுகிறார்? உங்கள் கருத்து என்ன?
கற்றல்
விளைவுகள்:
- T702: படைப்பாளி (நாமக்கல் கவிஞர்)
வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் தமது சொந்த அனுபவங்களுடன்
ஒப்பிட்டு அறிதல்.
- T704: தாங்கள் படித்தவற்றை பற்றி
சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் மற்றும் புரிதலை
மேம்படுத்துதல்.
- T712: கவிதையில் அமைந்துள்ள சொற்கள், சொற்றொடர்களைப்
புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
தொடர்
பணி:
- நாமக்கல் கவிஞர் எழுதிய "கத்தியின்றி
ரத்தமின்றி" பாடலைப் படித்துச் சுவைத்து, அதில்
உள்ள கருத்துகளைக் குறித்து வருதல்.
- "எங்கள் தமிழ்" பாடலை மனப்பாடம்
செய்து வருதல்
_______________________________________
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை
