www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : முதல் பருவம்
மாதம் : ஜூன்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : ஒன்றல்ல இரண்டல்ல
அறிமுகம்:
தமிழ்நாட்டின்
இயற்கை வளம், இலக்கிய வளம் மற்றும் தமிழரின்
கொடைத்திறனைப் போற்றும் பாடலை அறிமுகப்படுத்தி, தமிழகத்தின்
பெருமைகளை மாணவர்களுக்கு உணர்த்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- உடுமலை நாராயணகவியின் படம்.
- தமிழகத்தின் இயற்கை வளங்கள் மற்றும் வள்ளல்களின்
கொடைத்திறன் குறித்த படத்தொகுப்புகள்.
- வள்ளல் வேள்பாரி மற்றும் குமணவள்ளல் குறித்த
தகவல் அட்டைகள்.
நோக்கம்:
- தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் இலக்கிய வளங்களை
அறிதல்.
- கொடைத்திறன் மிக்க தமிழரின் வரலாற்றைப்
புரிந்துகொள்ளுதல்.
- பழந்தமிழ் இலக்கிய வடிவங்களை அடையாளம் காணுதல்.
ஆசிரியர்
குறிப்பு:
தமிழ்நாட்டின் வளங்கள் ஒன்றிரண்டல்ல பல என்பதை விளக்கி, பகுத்தறிவுக்
கவிராயர் உடுமலை நாராயணகவியின் பங்களிப்பை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்
கூறுதல்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
Ø தமிழ்நாட்டின்
சிறப்புகள் ஒன்றிரண்டல்ல, பல.
Ø இங்கு
வீசும் தென்றல் தேன்மணம் கமழும்; நிலம்
செங்கனியையும் பொற்கதிரையும் தருகிறது.
Ø தமிழ்
இலக்கியங்கள், வள்ளல்களின் தியாகங்கள் என அனைத்தும்
ஈடுஇணையற்றவை
என்பதை விளக்குதல்.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் தமிழுக்குக் கொடை கொடுத்த பிற
வள்ளல்கள் குறித்த செய்திகளைத் திரட்டுதல்.
- தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின்
பெயர்களைப் பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
- LOT (அறிதல்): 'முகில்' என்னும்
சொல்லின் பொருள் யாது?.
- MOT (புரிதல்): தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக்
கவிஞர் கூறுவன யாவை?.
- HOT (சிந்தித்தல்): தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத்
தோன்றக் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?.
கற்றல்
விளைவுகள் :
- T705: தாங்கள் வாழும் நிலப்பகுதி
சார்ந்த நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் பாடல்கள் பற்றி கலந்துரையாடி
அவற்றின் நயம் பாராட்டுதல்.
- T713: பல்வேறு பாடல்களைப் படித்து
அவற்றின் வருணனை மற்றும் இயற்கை வர்ணனை முறைகளை இனங்காணுதல்.
- T716: பாடல்களில் படித்த ஒரு
குறிப்பிட்ட சொல்/சொற்றொடர்களின் பொருண்மை உணர்ந்து அவற்றை உரையாடலில்
வெளிப்படுத்துதல்.
தொடர்
பணி:
- உடுமலை நாராயணகவியின் சிறப்புப் பெயர்களைக்
கண்டறிந்து வருக.
- நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு வள்ளல் பற்றிய சிறு
குறிப்பு எழுதி வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
