📚 காலாண்டுத் தேர்வு – 2026
தமிழ் – புத்தக மதிப்பீடு வினாக்கள்
எட்டாம் வகுப்பு📘 இயல் 1 – தமிழ் இன்பம்
1. தமிழ்மொழி வாழ்த்து
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
- ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
குறுவினா
- தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
- தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
சிறுவினா
- தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
சிந்தனை வினா
- பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
கற்பவை கற்றபின்
- ‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
2. ஆழிக்கு இணை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- தமிழ்த்தாய் ஐம்பெருங்காப்பியங்களை __________ அணிந்துள்ளாள்.
- பெரிய கப்பல்கள் __________ மீது செல்லும்.
- ‘முத்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
- ‘தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது’ – இத்தொடரில் தன் என்னும் சொல் __________ குறிக்கிறது.
தொகைச்சொற்களை விரித்து எழுதுக
- முத்தமிழ் : __________, __________, __________.
- முச்சங்கம் : __________, __________, __________.
- முச்சங்கு : __________, __________, __________.
குறுவினா
- தமிழ் யாரால் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்?
- இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?
சிறுவினா
- தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?
சிந்தனை வினா
- தமிழுக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
3. தமிழ் வரிவடிவ வளர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது.
- வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.
கோடிட்ட இடத்தை நிரப்புக
- கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ______ என அழைக்கப்பட்டன.
- எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ______.
குறுவினா
- ஓவிய எழுத்து என்றால் என்ன?
- ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
- ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
- வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் ஏதேனும் இரண்டனை எழுதுக.
சிறுவினா
- எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
- தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
நெடுவினா
- எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
சிந்தனை வினா
- தற்போதைய தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
4. சொற்பூங்கா
மதிப்பீடு
- ஓரெழுத்து ஒருமொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
5. எழுத்துகளின் பிறப்பு
மதிப்பீடு
‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- உதடுகளைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
- ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.
- வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
- நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
- கீழ் உதடும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
பொருத்துக
- க், ங் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
- ச், ஞ் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
- ட், ண் – நாவின் முதல், அண்ணத்தின் அடி
- த், ந் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
சிறுவினா
- எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
- மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
- ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
📗 இயல் 2 – இயற்கை
1. இயற்கையைப் போற்றுவோம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- கழுத்தில் இடுவது ______.
- கதிரவனின் மற்றொரு பெயர் ______.
- ‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
- ‘அங்கண்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
- கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
நயம் அறிக
- பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
- பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
- சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
- இயற்கை போற்றத்தக்கது ஏன்?
சிந்தனை வினா
- இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
2. பட்டமரம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- மலர்களிலிருந்து வரும் __________ வண்டுகளை ஈர்க்கும்.
- மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது __________ ஆகும்.
- ‘வருமென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
- கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.
நயம் அறிக
- ‘பட்ட மரம்’ பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
- பட்டமரம் எதனை நினைத்துக் கவலை அடைந்தது?
- பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது?
- பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
சிறுவினா
- ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
சிந்தனை வினா
- மரங்கள் பட்டுவிடாமல் காக்க, செய்ய வேண்டியவையாக நீங்கள் கருதுவன யாவை?
3. ஈடில்லா இயற்கை – தமிழர் மருத்துவம் (நேர்காணல்)
மதிப்பீடு
- நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.
- உங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் _____ பயன்படுத்தினர்.
- தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.
- நோய்கள் பெருக மனிதன்__________ விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.
- சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.
குறுவினா
- மருத்துவம் எப்போது தொடங்கியது?
- நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
- தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
சிறுவினா
- நோய்கள் பெருகக் காரணம் என்ன?
- பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
நெடுவினா
- தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
- நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
4. வெட்டுக்கிளியும் சருகுமானும்
மதிப்பீடு
- ‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
5. மயங்கொலிகள்
மதிப்பீடு – சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- சிரம் என்பது ------------------- (தலை / தளை)
- இலைக்கு வேறு பெயர் ------------------- (தளை / தழை)
- வண்டி இழுப்பது ------------------- (காலை / காளை)
- கடலுக்கு வேறு பெயர் ------------------- (பரவை / பறவை)
- பறவை வானில் ------------------- (பறந்தது / பரந்தது)
- கதவை மெல்லத் ------------------- (திறந்தான் / திரந்தான்)
- பூ ------------------- வீசும். (மனம் / மணம்)
- புலியின் ------------------- சிவந்து காணப்படும். (கன் / கண்)
- குழந்தைகள் ------------------- விளையாடினர். (பந்து / பன்து)
- வீட்டு வாசலில் ------------------- இட்டனர். (கோலம் / கோளம்)
மயங்கொலிப் பிழைகளைத் திருத்துக
- எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
- தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
- வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்லது.
குறுவினாக்கள்
- மயங்கொலி எழுத்துகள் யாவை?
- ண, ன, ந ஆகிய எழுத்துகள் (ஒலிகள்) பிறக்கும் முறையைக் கூறுக.
6. திருக்குறள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____.
- பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.
- ‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- ‘கடல்ஓடா’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.
குறுவினா
- சான்றோர்க்கு அழகாவது எது?
- பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
- ‘வருமுன்னர்க் காவாதான் ...’ எனத் தொடங்கும் குறளில் உள்ள உவமை அணியை விளக்குக.
- பிறிதுமொழிதல் அணி என்பது யாது?
திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக
- தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
- தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின் அல்லது.
கோடிட்ட இடத்தை நிரப்புக
-
வலியில் நிலைமையான் வல்லுருவம் _______
புலியின்தோல் _______மேய்ந் தற்று. -
விலங்கொடு _____ அனையர் _______
கற்றாரோடு ஏனை யவர்.
📕 இயல் 3 – கல்வி
1. பாடறிந்து ஒழுகுதல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- நம்மை _____ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
- மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.
- ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
குறுவினா
- பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
- முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
சிறுவினா
- நமக்கு இருக்க வேண்டிய பண்புநலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
- வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புநலன்களாக நீங்கள் கருதுவன யாவை?
2. புத்தியைத் தீட்டு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.
- ‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
நயம் அறிக
- ‘புத்தியைத் தீட்டு’ பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
- யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
- பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
சிறுவினா
- புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
சிந்தனை வினா
- உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
3. கல்வி கரையில – பல்துறைக் கல்வி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.
- கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.
- இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
நிரப்புக
- உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது __________ என்னும் அறிவுக்கலை.
- புற உலக ஆராய்ச்சிக்கு _____ கொழுகொம்பு போன்றது.
- வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது _____ இன்பம் ஆகும்.
பொருத்துக
- இயற்கை ஓவியம் – சிந்தாமணி
- இயற்கைத் தவம் – பெரியபுராணம்
- இயற்கைப் பரிணாமம் – பத்துப்பாட்டு
- இயற்கை அன்பு – கம்பராமாயணம்
குறுவினா
- இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
- தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
- திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
சிறுவினா
- தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை எழுதுக.
- அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
நெடுவினா
- காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
- திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
கற்பவை கற்றபின்
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
4. ஆன்ற குடிப்பிறத்தல்
மதிப்பீடு
- திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.
5. வினைமுற்று
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரில் உள்ள வினைமுற்று _____.
- பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.
- பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.
சிறுவினா
- வினைமுற்று என்றால் என்ன?
- தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
- ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...
