8TH-TAMIL-UNIT-5-VALAM PEYRUGUGA-NOTES OF LESSON

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       நவம்பர் / டிசம்பர்

இயல்                :         05

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       வளம் பெருகுக


அறிமுகம்:

உழவின் சிறப்பையும், மழையின்மையால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலின் மேன்மையையும் இப்பாடத்தின் வழி அறிதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • உழவுத் தொழில் மற்றும் விளைநிலங்கள் குறித்த படங்கள்.

  நோக்கம்:

  • உழவுத் தொழிலின் இன்றியமையாமையைப் புரிந்துகொள்ளுதல்.
  • மழையை எதிர்நோக்கும் உழவர்களின் வாழ்வியலை உணர்ந்து இயற்கை வளத்தைப் போற்றுதல்.

  ஆசிரியர் குறிப்பு:

உழவுத் தொழில் நாட்டின் முதுகெலும்பு என்பதை விளக்குதல். மழையின் வருகையையும், அதனால் ஏற்படும் வளத்தையும், மழை பொய்த்தால் ஏற்படும் வறட்சியையும் கவிதை நயத்துடன் எடுத்துரைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

 விளக்கம்:

மழையின் வருகையால் ஏர் உழுதல், பயிர் வளர்தல், அறுவடை செய்தல் போன்ற வேளாண் செயல்பாடுகள் எவ்வாறு செழிக்கின்றன என்பதை விளக்குதல். இயற்கையின் கொடையான மழையே வாழ்வின் வளம் என்பதைக் கற்பித்தல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மாணவர்கள் பாடலை உணர்ச்சியுடன் வாசித்தல்.
  • உழவுத் தொழிலின் நன்மைகள் குறித்து வகுப்பில் கலந்துரையாடல்.

  மதிப்பீடு:

  • LOT: உழவுத் தொழிலுக்கு அடிப்படையான இயற்கை வளம் எது?
  • MOT: வளம் பெருக உழவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் யாவை?
  • HOT: நாட்டின் பொருளாதாரத்தில் உழவுத் தொழிலின் பங்கு என்ன?

  கற்றல் விளைவுகள்:

  • T820: உழவுத் தொழில், விதை விதைத்தல் போன்ற செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.
  • T811: படிக்கும்போது பல்வேறு எழுத்தியியல் நடைகளையும், இயற்கை அழகின் வர்ணனை முறைகளையும் இனங்காணுதல்.

  தொடர் பணி:

"உழவுத் தொழிலின் சிறப்பு" என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதி வருக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post