www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர் / டிசம்பர்
இயல் : 05
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : கோணக்காத்துப் பாட்டு
அறிமுகம்:
இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அக்கால மக்கள் பேரிடர்களைக் கண்டு அஞ்சாமல் எதிர்நோக்கிய முறையையும்
விவரிக்கும் நாட்டுப்புற இலக்கியம் ஒன்றை அறிதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- புயல் மற்றும் இயற்கை சீற்றங்கள் தொடர்பான படங்கள்.
நோக்கம்:
- இயற்கை பேரிடர்கள் குறித்து விழிப்புணர்வு பெறுதல்.
- நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பாடல்களின் வாயிலாக
வாழ்வியல் செய்திகளை அறிதல்.
ஆசிரியர் குறிப்பு:
"கோணக்காத்துப் பாட்டு" என்பது கும்மிப்பாடல் வடிவில் அமைந்த
நாட்டுப்புற இலக்கியம் என்பதை விளக்குதல். பேரிடர்
காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும், அதை அவர்கள்
எப்படிப் பாடி வெளிப்படுத்தினர் என்பதையும் மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
அக்காலத்தில் வீசிய கடுமையான சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை விவரிக்கும்
பாடல் வரிகளை விளக்குதல். இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சாமல்,
துணிச்சலோடு அதை எதிர்நோக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் பாடலை கும்மிப் பாடலாகப் பாடுதல்.
- இயற்கைச் சீற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும்
முறைகள் குறித்துக் கலந்துரையாடல்.
மதிப்பீடு:
- LOT: கோணக்காத்துப் பாட்டு
எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?
- MOT: புயல் காற்று வீசியபோது
மக்கள் என்னென்ன பாதிப்புகளைச் சந்தித்தனர்?
- HOT: இயற்கை பேரிடர்களின்
போது நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
கற்றல் விளைவுகள்:
- T804: தமது சுற்றுப்புறத்தில்
வழங்கும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் கதைகள் பற்றிப் பேசுதல்.
- T807: பாடலைப் படிக்கும் போது
அதனை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.
தொடர் பணி:
உங்கள் பகுதியில் ஏற்பட்ட ஏதாவது ஒரு மழைக்கால அல்லது புயல் கால அனுபவத்தை
ஒரு சிறு கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ எழுதி வருக.
