8TH-TAMIL-UNIT-4-THIRUKURAL-NOTES OF LESSON

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       அக்டோபர்

இயல்                :         04

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       திருக்குறள்


 அறிமுகம்:

திருவள்ளுவர் அருளிய திருக்குறளில், ஒரு தலைவன் அல்லது ஒருவன் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆளுமை மற்றும் அறநெறிகளைப் போதிக்கும் அதிகாரங்களை அறிமுகம் செய்தல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • திருக்குறள் புத்தகம்
  • திருக்குறள் கருத்துகள் அடங்கிய காட்சி அட்டைகள் மற்றும் திருவள்ளுவர் ஓவியம்.
  • திருக்குறள் அட்டை

  நோக்கம்:

  • தெரிந்து வினையாடல், செங்கோன்மை, வெருவந்த செய்யாமை, சொல்வன்மை, அவையறிதல் ஆகியவற்றின் வாழ்வியல் விழுமியங்களை அறிதல்.
  • திருக்குறளின் அணிநயங்கள் மற்றும் குறள் சொல்லும் அறக்கருத்துகளை அன்றாட வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தல்.

  ஆசிரியர் குறிப்பு:

திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் முப்பால் பகுப்பு மற்றும் இயல்களை விளக்குதல். ஒவ்வொரு குறளின் பொருளையும், அதிகாரத்தின் மையக் கருத்தையும் மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

  விளக்கம்:   

ஒரு செயலைச் செய்வதற்கு முன் ஆராய்ந்து செய்தல், செங்கோன்மை தவறாத அறநெறி, பிறர் அச்சப்படும்படியான செயல்களைத் தவிர்த்தல்,

சொல்லாற்றலின் முக்கியத்துவம் மற்றும் சபையில் பேச வேண்டிய முறை ஆகியவற்றை விளக்கமளித்தல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மாணவர்கள் குறள்களைச் சீர்பிரித்துப் பிழையின்றி வாசித்தல்.
  • குறள் கூறும் அறக்கருத்துகளைத் தற்கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திக் கலந்துரையாடுதல்.

  மதிப்பீடு:

  • LOT: சொல்வன்மை உடையவர் எவ்வாறு பேச வேண்டும்?
  • MOT: செங்கோன்மை பற்றி குறள் கூறுவது யாது?
  • HOT: 'அவையறிதல்' அதிகாரத்தின் அடிப்படையில், ஒரு அவையில் நாம் பேசும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?

  கற்றல் விளைவுகள்:

  • T808: கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் வினாக்களுக்கு விடை காண முற்படல்.
  • T810: பாடலில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

  தொடர் பணி:

திருக்குறளில் இருந்து, இந்த அதிகாரங்களிலிருந்து தலா ஒரு குறளை எழுதி, அதன் பொருளையும் எழுதி வருக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post