www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்/செப்டம்பர்
இயல் : 03
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : புத்தியைத் தீட்டு
அறிமுகம்:
மனித வாழ்விற்கு அறிவே ஆற்றல்; வன்முறையை விட அறிவினாலும்
அன்பினாலும் வெல்லும் வெற்றியே நிலையானது மற்றும் பெருமைக்குரியது
என்பதை சில நிகழ்வுகளைக்
கொண்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- ஆலங்குடி சோமுவின் புகைப்படம்
- பாடலில் இடம்பெறும் கருத்துகளை விளக்கும் அட்டைகள்.
நோக்கம்:
- அறிவே சிறந்த ஆயுதம் என்பதை மாணவர்கள் உணர்தல்.
- ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி, அன்பிற்குப் பாதைவிடும் பண்பினை வளர்த்தல்.
- கவிதையின் நயங்களை (எதுகை, மோனை, இயைபு) அறிதல்.
ஆசிரியர் குறிப்பு:
·
திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்ற ஆலங்குடி சோமு, சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர் என்பதையும், அவர்
கலைமாமணி விருது பெற்றவர் என்பதையும் விளக்குதல்.
·
ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பதையும், மன்னிக்கும் குணம் மாணிக்கக் கோயில் போன்றது என்பதையும் மாணவர்களுக்குப்
புரிய வைத்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
கத்தியைத்
தீட்டுவதை விட, புத்தியைத் தீட்டுவதே சிறந்தது என்று
கவிஞர் வலியுறுத்துகிறார். பகைவன் வந்தாலும் அன்பால் வெல்ல
வேண்டும் என்றும், அகம்பாவம் லாபமற்றது என்பதையும் பாடலின்
வழி விளக்குதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் பாடலை உணர்ச்சியுடன் பாடுதல்.
- "அறிவுதான் சிறந்த ஆயுதம்"
- தலைப்பில் வகுப்பில் கலந்துரையாடல்.
மதிப்பீடு:
- LOT: பகைவர்கள் வரும்போது
நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
- MOT: ஆலங்குடி சோமுவின்
சிறப்புகளைக் கூறுக.
- HOT: உங்கள் மீது பிறர்
வெறுப்புக் காட்டினால், அவர்களை அன்பினால் நீங்கள் எவ்வாறு
எதிர்கொள்வீர்கள்?
கற்றல் விளைவுகள்:
- T807: கட்டுரைகள், பாடல்களைப் படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து குறிப்பிட்ட
செய்திகளைக் கண்டறிதல்.
- T810: பாடலில் காணப்படும்
சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்களைப்
புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
தொடர் பணி:
அறிவின்
பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டி ஒரு தொகுப்பாக எழுதி வருக.
