www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்/செப்டம்பர்
இயல் : 03
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பல்துறைக்கல்வி
அறிமுகம்:
கல்வி
என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல, அது மனித ஆன்மாவின் வளர்ச்சிக்கும்,
அறிவுத் தேடலுக்கும், பண்பாட்டைக்
காப்பதற்கும் உதவும் ஒரு நெறிமுறை என்பதைத் திரு.வி.க.வின் சிந்தனைகள் வழி அறிமுகம்
செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல் .
- திரு.வி.க.வின் புகைப்படம் மற்றும் அவர் எழுதிய
நூல்களின் பட்டியல்.
நோக்கம்:
- ஏட்டுக்கல்வி, தாய்மொழி வழிக்கல்வி, காப்பியக் கல்வி, இயற்கைக் கல்வி, இசைக்கல்வி, நாடகக்கல்வி மற்றும் அறிவியல்
கல்வி ஆகியவற்றின் இன்றியமையாமையை உணர்தல்.
- கல்வி வருவாய் ஈட்டும் கருவி மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல் பயிற்சி என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
ஆசிரியர் குறிப்பு:
·
"தமிழ்த் தென்றல்" என்று
அழைக்கப்படும் திரு.வி.க.,
·
மனித வாழ்க்கையில் கல்வியின் பன்முகத்தன்மையை எவ்வாறு
வலியுறுத்துகிறார் என்பதை விளக்குதல்.
·
ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது என்பதையும், கல்வி என்பது அறநெறியைப் பயில உதவும் கருவி என்பதையும் மாணவர்களுக்குத்
தெளிவுபடுத்துதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
தமிழ்க்
காவியங்கள் (சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவை) மாணவர்களின்
உள்ளத்தில் எழும் இன்பத்தை விளக்குதல். ஏடுகளைப் பயில்வதோடு நில்லாது, இயற்கையோடு கலந்து கல்வி பயிலும் முறையையும், நவீன
உலகிற்குத் தேவையான அறிவியல் கல்வியின் அவசியத்தையும் விரிவாகக் கற்பித்தல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான துறைகள் மற்றும்
அந்தக் கல்வியின் தேவை குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.
- திரு.வி.க. குறிப்பிடும் காப்பியங்களை
அட்டவணைப்படுத்துதல்.
மதிப்பீடு:
- LOT: அறியாமையை நீக்கி அறிவை
விளக்குவது எது?
- MOT: தாய்மொழி வழிக்கல்வி ஏன்
சிறப்பானது என்று திரு.வி.க. கூறுகிறார்?
- HOT: திரு.வி.க. குறிப்பிடும்
பல்துறைக் கல்வியில், இன்றைய சூழலில் எதனைக் கற்க
விரும்புவீர்கள்? ஏன்?
கற்றல் விளைவுகள்:
- T808: ஒரு கட்டுரையைப் படித்த
பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல்.
- T811: படித்த பிறகு பல்வேறு
எழுத்தியியல் நடைகளையும் முறைகளையும் இனம் காணுதல்.
- T813: தேவைப்படின்
கலைக்களஞ்சியம் மற்றும் இணையதளத்தைப் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.
தொடர் பணி:
திரு.வி.க.
குறிப்பிடும் ஏதேனும் ஒரு காப்பியம் குறித்துச் சிறு கட்டுரை எழுதி வருக.
