www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்/செப்டம்பர்
இயல் : 03
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பாடறிந்து ஒழுகுதல்
அறிமுகம்:
அன்பு, அறிவு, பண்பு ஆகிய உயர்பண்புகளை மனிதன் எவ்வாறு
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும், வாழ்வியல்
விழுமியங்களைச் சான்றோர் காட்டிய வழியில் பின்பற்றி நடப்பதன் சிறப்பையும் இப்பாடல்
விளக்குகிறது.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்.
- சங்க இலக்கியம் மற்றும் கலித்தொகை பற்றிய விளக்க
அட்டைகள்.
- காணொளிக்காட்சிகள்
நோக்கம்:
- சங்ககாலத் தமிழரின் பண்பாடு மற்றும் வாழ்க்கை
முறையை அறிந்து போற்றுதல்.
- அன்பு, செறிவு, நிறை,
பொறை போன்ற நற்பண்புகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தல்.
ஆசிரியர் குறிப்பு:
·
கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார் என்பதையும், இது கலிப்பா எனும் பாவகையிலான நூல் என்பதையும் விளக்குதல்.
·
இல்வாழ்வு, நட்பு, பண்பு
மற்றும் நீதிமுறை குறித்த சங்க இலக்கியத்தின் நுட்பமான பார்வையை மாணவர்களுக்கு
எடுத்துரைத்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
வறியவருக்கு
உதவுதல், சான்றோர் வழியில் நடத்தல், வாக்கு
தவறாமை மற்றும் நீதிமுறை தவறாது நடத்தல் போன்ற மனிதன் வளர்க்க வேண்டிய
உயர்பண்புகளை நல்லந்துவனார் கலித்தொகையில் எவ்வாறு விளக்குகிறார் என்பதைக்
கற்பித்தல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- பாடலைச் சீர்பிரித்து வாசித்தல்.
- வகுப்பில் "நற்பண்புகள்" குறித்த
பட்டியல் தயாரித்தல் மற்றும் கலந்துரையாடல்.
மதிப்பீடு:
- LOT: மறைபொருளைக் காத்தல் எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
- MOT: பண்பு எனப்படுவது எது
என்று கலித்தொகை விளக்குகிறது?
- HOT: வாழ்வில் கடைப்பிடிக்க
வேண்டிய நற்பண்புகளில் மிக முக்கியமானது என்று நீங்கள் கருதுவது எது? ஏன்?
கற்றல் விளைவுகள்:
- T808: கட்டுரையைப் படித்த
பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல்.
- T810: பாடலில் காணப்படும் சொற்கள்,
தொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
தொடர் பணி:
பாடலில்
இடம்பெற்றுள்ள நற்பண்புகளை விளக்கும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றை உங்கள் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்தலாம் என எழுதி வருக.
