www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : முதல் பருவம்
மாதம் : ஆகஸ்ட்/செப்டம்பர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : விடுதலைத்திருநாள்
அறிமுகம்:
பிறந்தநாள், திருமணநாள் போன்ற
தனிப்பட்ட மகிழ்ச்சி தரும் நாட்களை விட, இந்தியர்
அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விடுதலைத் திருநாளின் சிறப்பினை மீராவின்
புதுக்கவிதை வாயிலாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- கவிஞர்
மீராவின் உருவப்படம்
- இந்திய
விடுதலைப் போராட்டம் மற்றும் விடுதலை நாள் தொடர்பான வரலாற்றுப் படங்கள்
- விடுதலைத்
திருநாள் உணர்வை வெளிப்படுத்தும் கவிதை வரிகள் அடங்கிய அட்டைகள்
நோக்கம்:
- விடுதலைத்
திருநாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்தல்
- தியாகிகளின்
போராட்டத்தையும், சுதந்திரத்தின்
தேவையையும் புரிந்துகொள்ளுதல்
- புதுக்கவிதை
வழி உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனை வளர்த்தல்
ஆசிரியர் குறிப்பு:
சுதந்திரத்திற்கு முந்தைய
இந்தியாவின் அடிமைநிலை, தியாகிகளின்
சபதம் மற்றும் விடுதலைக்குப் பிந்தைய ஆனந்தமான இந்தியாவைப் பற்றி கவிஞர் மீரா
கவிதை நடையில் விவரித்துள்ளதை ஆசிரியர் எடுத்துரைத்தல்
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
முன்னூறு ஆண்டு கால அந்நிய ஆட்சியை
முறியடித்த விடுதலை நாள், இந்தியத்
தாயின் கைவிலங்கு உடைந்த நாள், பகத்சிங்
கனவு கண்ட விடியல் தோன்றிய நாள் என விடுதலைத் திருநாளின் சிறப்புகளை விளக்குதல்
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- விடுதலைத்
திருநாளின் சிறப்பினை உணர்த்தும் வகையில் கவிதை அல்லது கட்டுரை எழுதி வருதல்
- விடுதலைப்
போராட்ட வீரர்களின் வரலாற்றை வகுப்பறையில் பகிர்ந்து கொள்ளுதல்
மதிப்பீடு:
- LOT (அறிதல்): 'சீவன்' என்னும் சொல்லின்
பொருள் யாது?
- MOT (புரிதல்): பகத்சிங்
கண்ட கனவு யாது?
- HOT (சிந்தித்தல்): நாட்டுப்பற்றை
வளர்க்கும் வகையில் விடுதலை நாளை நீங்கள் எவ்வாறு கொண்டாடலாம்?
கற்றல் விளைவுகள் :
·
T702 ஒன்றைப் படிக்கும் போது
அந்த படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தலும்
கருத்துக்களை தமது சொந்த கருத்துக்களுடனும் , அனுபவங்களுடனும் ஒப்பிட்டு தமது குறிப்பிட்ட
கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்
- T708 வெவ்வேறான உணர்ச்சிகரமான
பாடப்பொருள் பிரச்சனைகள் சாதி ,மதம், நிறம், பாலினம், சடங்குகள் போல்ன மீது காரண
காரிய அடிப்படையில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துதல்
- T721 சாதி ,மதம், நிறம், பாலினம் ,சடங்குகள்,
பழக்க வழக்கங்கள் போன்ற உணர்வு பூர்வமான சிக்கல்களில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துதல்
தொடர் பணி:
- விடுதலைப்
போராட்ட வீரர்களின் வரலாற்றை அறிந்து அவற்றை போற்றும் வகையில் ஒரு
நாட்குறிப்பு எழுதி வருக
- உங்களுக்கு
விருப்பமான விழா ஒன்றினைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
