📚 TET 2026 - தமிழ் - 10TH-STD-இயல்-5-கருபொருள்-வினாக்கள்

 

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026
தமிழ்
பத்தாம் வகுப்பு தரம்.
(Tnpsc, Tet, Trb, Ttse(11th), and All Compulsary Tamil Competative Exams - Purpose )
வினாக்களும், விடைகளும்
இணையவழித் தேர்வு வினாக்கள்
இயல் - 5 

இயல் – 5

அகப்பொருள் - கருபொருள்

1. பொருத்துக.

                அ) குறிஞ்சி            -          1)  கொற்றவை

                ஆ) முல்லை           -          2) வருணன்

                இ) மருதம்               -          3) இந்திரன்

                ஈ) நெய்தல்             -          4) திருமால்

                உ) பாலை               -          5) முருகன்

அ) 5,4,3,2,1                    ஆ)  4,5,3,2,1              இ) 3,5,4,2,1                ஈ) 5,1,3,2,4

2. முல்லைத் திணைக்குரிய மக்களைத் தேர்க.

  அ) எயினர்                    ஆ) சேர்ப்பன்              இ) ஊரன்                   ஈ) ஆயர்

3. கருபொருளில் பொருத்தாதைத் தேர்க.

         அ) மக்கள்                     ஆ) உணவு                இ) நிலம்                    ஈ) தொழில்

4. எயினர் – மக்கள் எத்திணைக்குரியவர்கள்?

         அ) குறிஞ்சி                  ஆ) பாலை                 இ) நெய்தல்                ஈ) முல்லை

5. வெண்ணெல் எத்திணை மக்களுக்குரிய உணவுப் பொருள்

         அ) குறிஞ்சி                  ஆ) பாலை                  இ) மருதம்                 ஈ) முல்லை

6. பொருத்துக.   உணவும், திணையும்

         அ) மலைநெல்              -          1) மருதம்

         ஆ) வரகு                       -          2) பாலை

         இ) செந்நெல்                -          3) குறிஞ்சி

         ஈ) சூறையாடிய பொருள் -     4) முல்லை

         அ) 4,3,2,1                      ஆ) 3,4,1,2                 இ) 4,3,1,2                   ஈ) 3,2,1,4

7. புலி, கரடி, சிங்கம் போன்றவை அச்சுறுத்தும் விலங்குகள். இத்தொடரில் குறிப்பிடப்படும் விலங்குகள் எத்திணைக்குரியது?

         அ) குறிஞ்சி                 ஆ) பாலை                  இ) மருதம்                  ஈ) முல்லை

8. எருமை, நீர்நாய் போன்றவை எத்திணைக்குரிய கருபொருள்?

         அ) குறிஞ்சி                  ஆ) பாலை                  இ) பாலை                   ஈ) மருதம்

9. நெய்தல் திணைக்குப் பொருந்தும் பூவைத் தேர்க.

         அ) காந்தள்                    ஆ) தோன்றி              இ) செங்கழுநீர்          ஈ) தாழை

10. குரவம், பாதிரி போன்றவை எத்திணைக்குரிய பூக்கள்?

         அ) குறிஞ்சி                  ஆ) பாலை                 இ) மருதம்                  ஈ) முல்லை

11. வேறுபட்டதைத் தேர்க.

         அ) அகில்                      ஆ) காயா                    இ) ஞாழல்                   ஈ) நாரை

12. மூதூரில் தனித்தனி அங்காடி தெருக்கள் இருந்தன. சிலப்பதிகாரம் குறிப்பிடும் மூதூர் எத்திணையைச் சேர்ந்தது?

         அ) குறிஞ்சி                  ஆ) பாலை                  இ) மருதம்                  ஈ) முல்லை

13. பொருத்துக. திணையும் , மரமும்

         அ) குறிஞ்சி      -          1)  கொன்றை

         ஆ) முல்லை     -          2) அகில்

         இ) நெய்தல்      -          3) இலுப்பை

         ஈ) பாலை          -          4) புன்னை

         அ) 2,1,4,3                     ஆ) 4,3,2,1                  இ) 3,2,1,4       ஈ) 3,1,4,2

 

14. நீர்க்கோழி எவ்வகை திணைக்குரியது?

         அ) குறிஞ்சி                  ஆ) பாலை                  இ) மருதம்                 ஈ) முல்லை

15. கடற்காகம் எத்திணைக்குரியது?

         அ) குறிஞ்சி                  ஆ) நெய்தல்              இ) மருதம்                  ஈ) முல்லை

16. சரியாகப் பொருந்தாத  ஒன்றைத் தேர்க.

         1) முல்லை        -          அ) தோன்றல்

         2) மருதம்          -          ஆ) செங்கழுநீர்

         3) நெய்தல்        -          இ) ஞாழல்

         4) பாலை           -          ஈ) சிறுகுடி

         அ) ஆ               ஆ) இ             இ) ஈ               ஈ) அ

17. குறும்பு எத்திணைக்குரியது?

         அ) குறிஞ்சி                  ஆ) பாலை                 இ) மருதம்                  ஈ) முல்லை

18. பொருத்துக. திணையும், நீரும்

         அ) குறிஞ்சி      -          1) காட்டாறு 

         ஆ) முல்லை     -          2) உவர்க்கழி

         இ) மருதம்         -          3) சுனை நீர்

         ஈ) நெய்தல்       -          4) பொய்கை

         அ) 4,1,3,2                      ஆ) 2,4,3,1                  இ) 3,4,1,2                   ஈ) 3,1,4,2

19. பொருத்தா தொழிலைத் தேர்க.

         அ) கிழங்கு அகழ்தல்   ஆ) நெல்லரிதல்        இ) மீன் பிடித்தல்       ஈ) நெசவு

20. விளரி யாழ் – எத்திணைக்குரியது?

            அ) குறிஞ்சி               ஆ) பாலை                  இ) நெய்தல்               ஈ) முல்லை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post