8TH-TAMIL-UNIT-4-THIRUKKEYTHARAM-NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       அக்டோபர்

இயல்                :         04

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       திருக்கேதாரம்



 அறிமுகம்:

இசையோடு இணையும் பாடல்கள் உள்ளத்திற்கு விருந்தாக அமைவதை விளக்கும் விதமாக, சுந்தரர் பாடியுள்ள தேவாரப் பாடல் ஒன்றின் மூலம் திருக்கேதாரத்தின் சிறப்புகளை அறிதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • சுந்தரர் புகைப்படம் மற்றும் திருக்கேதாரத்தின் நிழற்படங்கள்.

  நோக்கம்:

  • இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை குறித்த செய்திகளை அறிந்து போற்றுதல்.
  • பன்னிரு திருமுறைகளில் ஒன்றான தேவாரத்தின் சிறப்பை உணர்தல்.

  ஆசிரியர் குறிப்பு:

சுந்தரர் தேவாரப்பாடிய மூவருள் ஒருவர் என்பதையும், அவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்று அழைக்கப்படுவதையும் விளக்குதல். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவர் பாடிய தொகுப்பே 'தேவாரம்' என்பதையும், இதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

பண்ணோடு சேர்ந்த இனிய பாடல்களைப் பாடும்போது, புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும் சூழலையும், பொன்வண்ண நீர்நிலைகளும் மதயானைகளும் நிறைந்து எழும் இசை ஒலியால் திருக்கேதாரம் சிறந்து விளங்குவதை விளக்குதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • பாடலின் பொருளை உணர்ந்து சீர்பிரித்து வாசித்தல்.
  • பாடல் வரிகளில் விவரிக்கப்பட்டுள்ள இசைக்கருவிகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைப் பட்டியலிடுதல்.

  மதிப்பீடு:

  • LOT: காட்டிலிருந்து வந்த எவை கரும்பைத் தின்றன?
  • MOT: திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
  • HOT: விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என்பது குறித்து உமது கருத்து யாது?

  கற்றல் விளைவுகள்:

  • T810: பாடலில் காணப்படும் சொற்கள், தொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
  • T811: படிக்கும்போது பல்வேறு எழுத்தியியல் நடைகளையும் முறைகளையும் (இயற்கை அழகின் வர்ணனை முறை) இனங்காணுதல்.

  தொடர் பணி:

தேவாரம் பாடிய மூவர் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர்கள் பாடிய பாடல்களின் சிறப்புகளை ஒரு சிறு கட்டுரையாக எழுதி வருக

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post