www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
இயல் : 04
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : தமிழர் இசைக்கருவிகள்
அறிமுகம்:
மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்த குரல் வழியாகவோ அல்லது
செயற்கைக் கருவி வழியாகவோ உருவான இசையையும், காலப்போக்கில் பலவிதமான இசைக்கருவிகள்
தோன்றி வளர்ச்சி பெற்றதையும் கலைக்களஞ்சியத் தகவல்கள் வழி அறிதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- பல்வேறு வகைப்பட்ட தமிழர் இசைக்கருவிகளின் படங்கள்
- ஒலிகளைக்
கேட்கும் காணொலிகள்.
நோக்கம்:
- இசைத்துறை பற்றிய அடிப்படை அறிவைப் பெறுதல்.
- பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளின்
நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல்.
ஆசிரியர் குறிப்பு:
இசையை நகை, அழுகை, வீரம்
உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தும் கலையாகவும், குரல்வழி
இசை மற்றும் கருவிவழி இசை என இருவகையாகவும் பிரித்து விளக்குதல். இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் 'பாணர்'
எனப்பட்டனர் என்பதைக் கற்பித்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
மக்கள் உணர்ச்சிகளை
வெளிப்படுத்தக் கருவியாக இசைக்கருவிகளை உருவாக்கினர் என்பதை விளக்குதல். பல்வேறு நிகழ்வுகளுக்காகக் கருவிகள் தோன்றிப் பெருகியதையும், பாணர்களின் முக்கியத்துவத்தையும் விளக்குதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் தமக்குத் தெரிந்த இசைக்கருவிகளின்
பெயர்களைப் பட்டியலிடுதல்.
- குறிப்பிட்ட இசைக்கருவிகள் எந்த நிகழ்வுகளுக்குப்
பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.
மதிப்பீடு:
- LOT: இசையை எத்தனை வகையாகப்
பிரிப்பர்?
- MOT: இசைக்கருவிகளை இசைத்துப்
பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- HOT: மனித வாழ்வின் பல்வேறு
நிகழ்வுகளில் இசைக்கருவிகளின் பங்கு என்ன?
கற்றல் விளைவுகள்:
- T813: தேவைப்படின்
கலைக்களஞ்சியம் மற்றும் இணையதளத்தைப் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.
- T820: உழவுத் தொழில், நாட்டியம், மெய்ப்பாடுகள் முதலான
செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் (குறிப்பு:
இசைக்கருவிகள் சார்ந்த சொற்களைப் பயன்படுத்துதல்).
தொடர் பணி:
உங்கள் பகுதியில் உள்ள இசைக்கருவிகளைப் பட்டியலிட்டு, அவை எந்தெந்தக் கலைநிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைச்
சேகரித்து வருக.
