10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-5-PDF

 


WWW.TAMILVITHAI.COM                           WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-5-2026

நேரம் : 40 நிமிடம்                                                                                                           மதிப்பெண்:25

பகுதி-அ

அ) உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                                       (5x1=5)

1. “பாடி மகிழ்ந்தனர்”  என்பது எவ்வகைத் தொடர்

அ)  பெயரெச்சத்தொடர்                    ஆ) விளித் தொடர்    

இ) எழுவாய்த் தொடர்                       ஈ) வினையெச்சத் தொடர்

2. காசி காண்டம் என்பது _

அ) காசி நகரத்திற்கு வழிபடுத்தும் நூல்          ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஈ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

3 ஒரு விரலைக் காட்டிச் ‘ சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்டல் ____________

அ) இட வழு   ஆ) கால வழு             இ) வினா வழு            ஈ) மரபு வழு

4. “ மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து“ என வரிகள் இடம் பெற்ற நூல் ____

அ) முக்கூடற்பள்ளு  ஆ) குறுந்தொகை  இ) அகநானூறு   ஈ) ஐங்குறுநூறு

5. பாடாண் திணை என்பது  _____

அ) பாடும் ஆண் மகனின் ஒழுக்கலாறுகள்             ஆ) பொருந்தா காமம்  

இ)  பொதுவான தகவல்கள்                                     ஈ) ஒரு தலை காமம்

பிரிவு-2 / பகுதி-ஆ

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                                     (3+2=5)

6.அ) “அன்னை மொழியே” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக     (அல்லது)

ஆ) புண்ணிய புலவீர் எனத் தொடங்கும்  பாடலை அடிபிறழாமல் எழுதுக.

7. “பொருளல்ல” எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு-3 / பகுதி- இ                                                         

விண்ணப்பம் நிரப்புக:-                                                                                                  (3X5=15)

8. திருநெல்வேலி மாவட்டம், தென்காசி நகரம், எண்-5 பழைய குற்றாலம் என்ற முகவரி வசித்து வரும் அப்துல் காதர் மகள் ஹஜீரா பானு என்பவர் கணினியில் MCA முடித்து, அங்குள்ள தனியார் கணினி பயிற்சி நிறுவனத்தில் கணினி பயிற்றுவிப்பாளர் பணியினை பெறுவதற்கு உரிய விண்ணப்பப் படிவம் நிரப்புக.

9. நீ உருவாக்கிய பள்ளியைத் தூய்மையாக வைத்திருக்கும் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த தலைமையாசிரியர் ஒப்புதல் வேண்டி கடிதம் வரைக. 

10. மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும், அதனால் ஏற்படும் நன்மைகளும் குறித்து பட்டியலிடுக.

 

CLICK HERE

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post